Ad Widget

முரளிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் அதி உயர் கௌரவம்

>

சர்வதேச கிரிக்கெட் சபையின் அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருதை ‘ICC Hall of Fame’ இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பெறவுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட து.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை உலக கிரிக்கெட் சபை, தனது அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கின்றது.

இம்முறை அதில் முரளியும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதனைப் பெறும் முதல் இலங்கை வீரர் முரளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை முரளியுடன்  கரேன் ரொல்டன், ஆர்தர் மோரிஸ், ஜோர்ஜ் லோமேன் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts