Ad Widget

வலிகாமம் வடக்கில் 11 கிராமங்கள் விடப்படமாட்டாது!!

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அக்காணிகள் விடுவிக்கப்படாது எனவும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்றைய தினம்...

உலக வங்கிக் குழுவினர் சபாபதி நலன்புரி நிலையத்திற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வருகை தந்த உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அனற்மாரி டில்ஷன் தலைமையிலான குழுவினர் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சபாபதி நலன்புரி நிலயத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துள்ளனர். நேற்றைய தினம் காலை 11.00 சபாபதி நலன்புரி நிலையத்திற்குச் சென்ற உலக வங்கிக் குழு அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்...
Ad Widget

‘நிலத்தை மீட்க உயிரையும் கொடுப்போம்’ : முகாம் மக்கள் மங்களவிடம் எடுத்துரைப்பு

எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றும், நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விட தயாராக உள்ளதாகவும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மல்லாகம், கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உறுதியாகத் தெரிவித்தனர். அத்துடன், தங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம் என்றும்,...

காணிகள் விடுப்பது சாத்தியமற்றது. கட்டளை தளபதி சேனாநாயக்க

'பலாலி மற்றும் வசாவிளான் விமான நிலைய சந்தியை அண்மித்த பகுதிகள், விமான நிலைய விரிவாக்கலுக்காக மூன்றாம் கட்டமாக மதிப்பீடு செய்யுப்படவுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் விடுவிப்பது சாத்தியமற்றது' என்று யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான உறுதி செய்யப்பட்ட கடிதம்...

வலி வடக்கில் காணிவிடுவிப்பு : மக்களை ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளள 460 ஏக்கர் காணியில் காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மத்தி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நலன்புரி நிலையங்களில் வாழும்மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படவுள்ள...

காணி இல்லாதோருக்கு காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில் மீள்குடியேற்றப்பட்டு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பலாலியில் நேற்று மதியம் குறித்த காணி உரிததுக்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, அரசாங்கத்தினால்...

தமிழர் தாயகத்தில் புதிய குடியேற்றத்திற்கே எதிர்ப்பு!

தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது என தெரிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், எனினும் வெளியேற்றப்பட்டவர்களை மீளக் குடியேற்றுவதாகக் கூறி புதிதாக திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடி யேற்றங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை...

மூன்று மாதங்களில் முகாம் வாழ்க்கையை முடித்து சொந்த வீடுகளில் வாழ முடியும்

முகாம் வாழ்க்கையினை முடிவுறுத்தி சொந்த இடங்களில் வாழ்வதற்கான திட்டத்தின் முதற்படியாக காணி அற்றவர்களுக்கு காணி வழங்கும் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்நேற்று (26) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

குடியிருப்பு முகாமில் இருந்து இராணுவத்தினர் வௌியேற்றம்

வவுனியா - குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, வவுனியா பாதுகாப்பு சேனை தலைமையகத்திற்கு சொந்தமான இராணுவ முகாமில் அமைந்துள்ள கட்டடத்தில் இருந்து இராணுவத்தினர் வௌியேற்றப்பட்டுள்ளனர். இதன்படி அந்த கட்டத்தை மீள வவுனியா மாவட்ட செயலகத்திடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அம் மாவட்ட செயலாளர் ரோஹன புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் குறித்த கட்டடம் இராணுவ...

வலி.வடக்கில் 460 ஏக்கர் காணி ஒரு வாரத்திற்குள் விடுவிப்பு

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி...

மயிலிட்டியில் சில பகுதிகளை விடுவிக்க இணக்கம்!

மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி...

‘காணிகளை விடுவிக்காவிடின் எதிர்க்கத் தயாராகுங்கள்’

'நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்' என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது....

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகள்

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நலன்புரி...

இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் நிறைவுறும்!

இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் காணிகளற்றவர்களாக 936பேர் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 971 வீடுகளைக் கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதனடிப்படையில் கீரிமலைக்கு அருகில் உள்ள காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 104 வீடுகள் பலாலி...

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு ஏக்கர் விஸ்தீரணமாக காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள காணி மாவட்ட செயலாளர் ஊடாக உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இக்காணி விடுவிக்கப்பட்டிருக்கின்றது.

வலி.வடக்கில் 640 ஏக்கர் காணி அடுத்தவாரம் விடுவிப்பு

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 640 ஏக்கர் காணி அடுத்த வாரம் மக்கள் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படுகிறது. வலி. வடக்கில் 1500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் இதையடுத்து கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியார்ச்சி பலாலி வந்து மாவட்டச் செயலர் மற்றும் படைத்தரப்புகளுடன் கலந்துரையாடினர்....

வலி.வடக்கில் மேலும் 700 ஏக்கர் காணி ஓரிரு வாரத்தில் விடுவிக்கப்படும்

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் இன்னமும் தம்வசம் வைத்துள்ள காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்தும் அடுத்து வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கு முன்னர் அவற்றை விடுவிப்பதற்கான கால அட்டவணை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிவில் அதிகாரிகளிடம் நேற்றுத் தெரிவித்தார். இதன்...

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஆதாரத்துடன் வரவில்லை : வடக்கு ஆளுநர்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் மக்கள் யாரும் இதுவரை காணி உறுதிப்பத்திரத்துடன் வரவில்லையென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்- ”வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அவர்களின் சொந்தக் காணிகளிகளிலேயே...

இரவு பகலாக தொடர்கிறது பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்....

இராணுவம் வீதியை ஆக்கிரமித்ததால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் தையிட்டி மக்கள்

யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன...
Loading posts...

All posts loaded

No more posts