கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் விஜயம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட குறித்த இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் 04.07.2023 நேற்றையதினம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29.06.2023 அன்று கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலவலர்பிரிவில் மனித எச்சங்கள் சில இனங்காணப்பட்டன. இந் நிலையில் கடந்த 30.06.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேரடிராகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். இந்...

நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரழப்பு!!

இன்று நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்று (05.07.2023) நள்ளிரவு வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (30) என்ற இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளர். நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது...
Ad Widget

யாழில் மேலும் 24 பேர் கைது!!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இது வரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

யாழ் மாவட்டத்திற்கு சுகாதாரத் திணைக்களம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

யாழ் மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள்....

நீண்ட விடுமுறைக்கு பின்னர் வங்கிகள் இன்று திறப்பு!!

05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதேநேரம், பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் செயல்படுகிறது. கடந்த வௌ்ளிக்கிழமை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்காக சிறப்பு வங்கி விடுமுறை வழங்கப்பட்டதுடன் கடந்த வியாழக்கிழமை முதல் வங்கிகள்...

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வகையான சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையினை 3,000 ரூபா வரையில்...

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்றுபார்வையிட்டார் கஜேந்திரன்

கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார் கொக்குத்தொடுவாய் மத்தியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக நிலத்தை தோண்டிய போது புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புகளும் ஆண் பெண் போராளிகளின் சீருடைகள் சிலவும் வெளிவந்துள்ளது. இப்பகுதிக்கு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு!!

முல்லைத்தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினைத் தோண்டிய போதே குறித்த மனித எச்சங்கள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும்...

மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் கொடுக்கப்பட்ட காலாவதியான குளிர்பானம்!!

உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியாகியுள்ளது. உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார். இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள...

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி!!

.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில்,...

கிளிநொச்சியில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. 2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை...

யாழில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 6 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்திரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றிருந்தன எனினும்...

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்...

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து நள்ளிரவில் தீக்கிரை!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான...

யாழ் – கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையின் நவீனமயப்படுத்தல் காரணமாக குறித்த சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்த வரையிலான பகுதியின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதியும் எதிர்பார்த்துள்ளார். அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு...

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மீது கைவைக்கும் எண்ணம் இல்லை- மத்திய வங்கி ஆளுநர் தகவல்

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் (29.06.2023)...

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி

யாழ்ப்பாணம் - அராலி,வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம்(29.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த, யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது...

ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்துள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும்...

யாழ்ப்பாணத்தில் – வசூல் மன்னர்களாக மாறிய அரச ஊழியர்கள், கண்டுகொள்வாரா அரச அதிபர்?

அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள், பாரபட்சங்கள் காணப்படுவதாக குற்றம் சாட்டும் மக்கள், குறித்த பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்குவதற்கும் நிதி வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதுடன் குறித்த நிதி...
Loading posts...

All posts loaded

No more posts