யாழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை – அரசாங்க அதிபர் அறிவிப்பு

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். சமுர்த்தி பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக...

தனியார் வகுப்புகளுக்குப் தடை விதிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள்!!

யாழில் 9 ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு யூலை 1ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம் யாழ் மாவட்ட செயலகத்தினால் அண்மையில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு யாழ் வணிகர் கழகம், மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் இத்திட்டம் அமுலுக்கு வருமாக...
Ad Widget

அரசியல் கைதி தேவதாசன் விடுதலைக்கு குரலற்றவர்கள் குரல் அமைப்பு வரவேற்பு!!

பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பு சென்று அவரை சந்தித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமையாற்றி...

சூனியம் வைக்கப்பட்டுள்ளது குப்பை போடுபவர்களுக்கு விபத்து நிச்சயம்!! அச்சத்தில் மக்கள்!!

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவர், வித்தியாசமான பதாதையொன்றை வைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பைத் தனது வீட்டின் முன்னால் பதாதையொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். குறித்த நபரின் வீட்டு பகுதியின் வீதியோரமாகப் பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளதால் தினமும் பல...

எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!!

எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் குறிப்பிட்டார். இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல்...

காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்!

சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி, பொன்நகர் கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து, தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டிவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கிளிநொச்சி டிப்போ...

போதைக்கு பணம் கொடுக்க மறுத்ததால் குடும்ப பெண்ணை தீ வைத்து கொழுத்திய இளைஞன் கைது!

தீ காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பெண்ணை தீ வைத்து கொழுத்திய குற்றச்சாட்டில் 23 வயதான இளைஞன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி (வயது 43) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார். கடந்த 13ஆம்...

இன்றுமுதல் மருந்துகளின் விலை குறைப்பு!!

வர்த்தமானி அறிவித்தலின்படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26) முதல் 16 வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,500 மில்லிகிராம் எடையுள்ள பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49...

யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (25.06.2023), ஞாயிற்றுக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது....

யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!

யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட சமுத்தி தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,...

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதியுமான 66 வயதுடைய கனகசபை தேவதாசன் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு...

மானிப்பாயில் இரு வாள்களுடன் ஒருவர் கைது!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் வியாழக்கிழமை (22) இரவு இரு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இரண்டு வாள்களை எடுத்துச் சென்றபோது வீதியில் வைத்து, மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு மேற்கொள்வதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேராட்டத்தில் ஈடுப்பட்ட சந்தை வர்த்தகர்கள் சார்பாக வர்த்தக சங்க பிரதிநிதிகள்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “விழித்திரை சத்திர சிகிச்சைகள் சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் தற்பொழுது விழித்திரை சத்திர சிகிச்சை...

யாழின் பெண்கள் பாடசாலைகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் மாணவிகளின் நலன் கருதி பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்ட வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும்,...

சிறப்பு வங்கி விடுமுறை!

எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜூன் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு டெலிகொம் நிறுவனத்தை விற்க முயற்சி: பொன்சேகா

டெலிகொம் நிறுவனத்தை முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு விற்க ஜனாதிபதி முயற்சிப்பதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (22.06.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வது தொடர்பில் இங்கிலாந்தில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய நபருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். டெலிகொம்...

கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுக்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா!!

கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரைனையும் இணைக்கும் பாலமானது உக்ரைனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேவேளை சோங்கார் பாலம், உக்ரைனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது. கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன்...

அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு!!

யாழ். வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அல்லைப்பிட்டி மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின்போது மண்டை ஓட்டுத் துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்றக் கட்டளையைப் பெற்றிருந்தனர். ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி...
Loading posts...

All posts loaded

No more posts