அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு!!

யாழ். வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அல்லைப்பிட்டி மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின்போது மண்டை ஓட்டுத் துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் குறித்த பிரதேசத்தை குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தி நீதிமன்றக் கட்டளையைப் பெற்றிருந்தனர். ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி...
Ad Widget

கம்மன்பிலவின் விஜயத்திற்கு பாரிய எதிர்ப்பு!

திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணி முறிப்பு காணிகளை விடுவிக்க கோரியும் , தண்ணி முறிப்பு மக்களை மீள்குடியேற்றவும் வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே குருந்தூர்...

மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகமே அரசாங்கத்தை பாதுகாக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

கபுடு கா,கா, என்று மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. மக்கள் போராட்டத்தால் சிறிது காலம் விலகி இருந்தவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

கஜேந்திரகுமார் கைது விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்!!

மருதங்கேணி விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் இரண்டு மணிநேரமாக பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் நேற்றையதினம் (21.06.2023) வாக்குமூலம் பெறப்பட்டது. கிளிநொச்சி பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரின் அழைப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபன் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த...

கத்தியை காட்டி மிரட்டி இளம் பெண் கடத்தல்!

கிளிநொச்சி - பூநகரி, முட்கொம்பன் பகுதியில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் அவரது கணவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிளிநாச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.47 ரூபாயாக அதிகரித்து விற்பனை விலை 314.49 ரூபாயாக பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் படி...

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 150 ரூபாய்!

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் பாண் ஒரு றாத்தலின் விலை 150 ரூபாயாக இருக்கும் என யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிஒஉத்துள்ளது. தற்பொழுது பாணின் விலையை மாத்திரமே குறைத்துள்ளோம். ஏனைய பேக்கரி உற்பத்திகளின் (பணிஸ் உள்ளிட்டவை) விலையை குறைக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் மாவின் விலை குறைக்கப்படுமாயின் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின்...

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை...

இன்று கன மழை பெய்யும் சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் அத்திவாரம் வெட்டும் போது, மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு...

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள பேரினவாதம் தயாரித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை அறிக்கைகளை ஏற்க முடியாது. யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்., பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ், போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் நூலகத்தை வந்தடைந்தது. இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்...

மழையுடனான கால நிலை நீடிக்கும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என்றும் ஊவா...

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கு தீர்மானம்!!

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும்...

நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!!

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட ஒருஇராத்தல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர். தாக்குதல்...

இந்திய மருந்துகளால் தீவிர பாதிப்பு! குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரழப்பு!!

ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய...

சீமெந்துக்கான வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3...
Loading posts...

All posts loaded

No more posts