வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச்சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச்சட்டம் எதிர்ப்புக்களின்றி வடமாகாண சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் குழு நிலை விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டன. வாத விவாதங்களின் பின்னரும், கூச்சல் குழப்பங்களின் மத்தியிலும், நிதி நியதிச்சட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு குழுநிலை...

மஹிந்தவின் மாளிகையை பெறுவதற்கான பிரேரணை நிறைவேற்றம்

மகிந்த ராஜபக்ஷவினால் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட மாளிகையினை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றது. அந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த பிரேரணையினை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கும்,...
Ad Widget

க்ளைபோசெட்டை விட அதிக விஷமுடைய கிருமிநாசினி சந்தையில்?

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் (Glyphosate) எனும் கிருமி நாசினியை விட, அதிக விஷமுடைய பிறிதொரு விவசாய இரசாயனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதன்படி க்ளுபோசினேட் (Glufosinate) எனும் பெயரில் குறித்த கிருமி நாசினி சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இப் புதிய களை நாசினி க்ளைபோசெட்டை விட 15 மடங்கு அதிக...

உதவிய அனைவருக்கும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் நன்றி

பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, நிதி உதவி வழங்கிய வௌிநாட்டு மற்றும் இலங்கை மக்களுக்கு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணிப்பாளர் வை.எம்.வில்பிரட் குமாரசிறி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக விளம்பரங்களை மேற்கொண்ட தெரண ஊடக நிறுவனத்துக்கும் அவர் விஷேடமாக நன்றி தெரிவித்துள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவைப்பட்ட பெட் ஸ்கேன் (PET...

சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை!

சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகவும் நேர்மையான, திறந்த வெளிநாட்டுக் கொள்கையையே பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை என்ற தொனிப்பொருளில் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புலைமைத்துவ கலந்துரையாடலில்...

சரணடைந்தவர்களின் விபரங்களை வழங்க அரசாங்கம் மறுப்பு!

இறுதிப் போரின்போது காணாமல் போனோரின் விபரங்களைத் தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தபோதிலும், இதுவரை அவர்கள் அதனை வழங்குவதற்கு எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்த விபரங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றிருந்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஓரளவுக்கு நிறைவுபெற்றிருக்கும். ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...

VIP அட்டையை அகற்ற மறந்த வடமாகாண சபை உறுப்பினர்

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார். அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால...

சீன தூதுவர் யாழ்.மாவட்டச் செயலாளர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் யி ஸியாங்லியாங் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடவடிக்கைகள் தொடர்பில், மாவட்டச் செயலாளரிடம் சீன தூதுவர்...

மாணவன் மீது தாக்குதல் : கூரையில் இருந்தவர் சிக்கினார்

மீசாலை - புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரமூர்த்தி பரணிதரன் (வயது 17) என்ற மாணவன் மீது, கொடிகாமம், இராமாவில் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், தன்னுடைய வீட்டின் கூரையின் மீதேறி ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுளார் என்று கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என் பண்டார தெரிவித்தார். குறித்த மாணவன்...

திருடனை காட்டிக் கொடுத்த அலைபேசி

யாழ்ப்பாணம் இணுவில் சிங்கத்தின் கலட்டி பகுதியில் இருந்த வீட்டுக்குள் திங்கட்கிழமை (13) இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது அலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது. அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக தனது அலைபேசியின் இருந்த விளக்கின்...

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் வடமாகாண அளுநரை சந்தித்தார்

வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோன் அடங்கிய குழுவினர் நேற்று வடமாகாண அளுனர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும்...

பஸ் சாரதிகளுக்கான விஷேட அனுமதிப் பத்திரம் அடுத்த மாதம் முதல் கட்டாயம்

மக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு வழங்கப்படும் விஷேட அனுமதிப் பத்திரத்தை அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த மாத ஆரம்பம் முதல் குறித்த அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும்...

வவுனியா இளைஞனால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

வவுனியா இளைஞர் ஒருவரால் தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.வவுனியா, ஓமந்தைப் பகுதியில் வசித்து வரும் என்.என்.ஜக்சன் (வயது 30) என்ற இளைஞனால் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது 10 வயதில் இருந்து சூழலுக்கு பாதிப்பில்லாத இயந்திரங்களை கண்டு பிடிப்பது தொடர்பில்...

தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்!

தபால் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். காலை முதல் ஆரம்பமான இந்த தொழிற்சங்க நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். தனது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தொடர்ந்தும்...

நூற்றாண்டைக் கடந்து வாழும் ஆரோக்கியமான ஆச்சி

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் வயோதிபர் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையைத் தானும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது சுகர், பிறசர், கொலஸ்ரோல், கேன்சர்,...

ஜப்பானில் மஹிந்தவுடன் உதயங்க

ஜப்பானுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கையர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்தார். ஜப்பான் ரூசூ இபரகி மாநிலத்தின் சுகுபா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் யுக்ரேன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட உதயங்க வீரதுங்கவும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தாய்லாந்து...

புனர்வாழ்வு பெற்ற மற்றொரு முன்னாள் போராளி புற்றுநோயால் மரணம்!

இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் போராளி, புற்றுநோயினால் மரணமாகியுள்ளார். முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றார்கள். இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த...

பிரதமர் ரணிலுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்!

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை...

கோத்தபாயவின் அறையில் தமிழினி எழுதிய புத்தகம்!

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தளபதி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் ஒரு கூர்வாளின் நிழலில் என்ற புத்தகம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயராஜ பக்ஷவின் அறையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு கூர்வாளின் நிழலில் பல இடைச்செருகல்கள் நடைபெற்றதாக தொடர்ந்து விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் அண்மையில் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்திக்கச் சென்ற ஊடவியலாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே...

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை மக்களின் பங்களிப்பு அவசியம்!

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு அனைத்து இலங்கையர்களும் அர்த்தபூர்வமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார். நேற்றய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வுகளின் ஆரம்ப உரையிலேயே அவர் இவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts