Ad Widget

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை ஆய்வு செய்ய குழு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பின்போது, அவர் இன்று இதனைக் கூறியுள்ளார்.

பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க குறித்த குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் வாரத்தில் இரண்டு தடவைகள் ஊடகங்கள் ஊடாக அறிவிக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts