எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை!

எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும்...

உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான எச்சரிக்கை!

க.பொ.த. உயர்­தரப் பரீட்­சையின் போது பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்துச் செல்­வது முற்­றாகத் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலங்கைப் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தின் பிரதிப் பரீட்சை ஆணை­யாளர் எஸ்.பிர­ண­வ­தாஸன் தகவல் தரு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி க.பொ.த. உயர்­தரப் பரீட்சை...
Ad Widget

மோதலுடன் தொடர்புடைய மாணவர்களை சிறைவைக்காதது ஏன்?சத்தாதிஸ்ஸ தேரர்

யாழ் பல்கலைக்கழக மோதலுடன் தொடர்புடைய தமிழ் மாணவர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்படாதது குறித்து சிங்கள பேரினவாத அமைப்பான ராவணா பலய என்ற அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. பகிடிவதை மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்பகுதியிலுள்ள பல்லைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கள அப்பாவி மாணவர்களை தாக்கி காயப்படுத்திய...

தனிமையிலிருந்த சிறுவனை மீட்டு பொலிஸில் ஒப்படைத்த முல்லைத்தீவு இளைஞர்கள்

சங்கானையை சிறுவன் ஒருவர் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சங்கானை சுழிபுரத்தை சேர்ந்த 11 வயதுடைய கரிகாலன் சுதர்சன் இந்த சிறுவனே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் தனியாக இருந்ததை அவதானித்த இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வினவியபோது, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளார் இதனையடுத்து சிறுவனை முல்லைத்தீவு பொலிஸ்...

வடக்கு ஊடகவியலாளர்கள் ஐவருக்கு விருது!

யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பால் வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யுத்தம் மற்றம் சமாதானம் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும் ஊடக தொழிற்சங்க சம்மேளனமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இவ்விருதானது வடக்கு மாகாணத்தைச்...

வடக்கில் முதலீட்டாளர் மாநாடு : புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடல்!

சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் வடக்கில் முதலீட்டாளர் மாநாடொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பாக புலம்பெயர் சமூகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நல்லூர் உற்சவத்தின்போது வடக்கிற்குப் பயணம் செய்யும் புலம்பெயர் சமூகத்துடன் இது குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அத்துடன், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் மற்றுமொரு தொகுதிக் காணி விடுவிப்பு!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) அப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்து குறித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அத்துடன் மீள் குடியேற்றத்திற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கருகில் இராணுவத்தினரால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார். பலாலி உயர் பாதுகாப்பு...

6 கிலோ கிராம் போதைப்பொருள் சிக்கியது : ஒருவர் கைது

உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தர், சனிக்கிழமை (23) இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பருத்தித்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில்...

ரயிலில் மோதுண்டு வயோதிபர் பலி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சனிக்கிழமை மாலை பயணித்த ரயிலில், யாழ். கோண்டாவில் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்ட 70 வயதான வயோதிபர் ரயிலில் மோதுண்டுஉயிரிழந்துள்ளார். அவ்வாறு பலியானவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தனர்.

எரிபொருள் விநியோக குழாயில் வெடிப்பு; எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தம்

கொழும்பு துறைமுகத்தின் எரிபொருள் விநியோக குழாயில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட 90 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் நேற்று இறக்கப்படும் போது குறித்த குழாய் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. லங்கா மசகு எண்ணெய் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர்...

42,000 வீடுகள் ஒப்படைக்கப்பட்டன; 8,000 வீடுகள் ஒப்படைக்கப்பட உள்ளன

இந்திய மத்திய அரசின் உதவியுடன் இலங்கையின் வடமாகாணத்தில் கட்டப்பட்டுள்ள 42,000 வீடுகளில் ஈழத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற தமிழ்சங்க மாநாடு ஒன்றில் பங்கேற்ற அவர் இத்தகவலை தெரிவித்ததாக இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மட்டக்களப்பு, யாழ்பாணம், திருகோணமலை...

கறுப்பு ஜூலை நினைவு தினம்: யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்!!

கறுப்பு ஜூலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் இன படுகொலையின் 33ஆவது ஆண்டு இன்று நினைவுகூறப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தால் சிங்கள மாணவர்கள் அச்சத்தில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஊடகவியலார்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த மூன்று தசாப்தங்களாக பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை முடிவுக்குக்...

போக்குவரத்து விதிமுறையை மீறிய பெண்ணுக்கு 22,500 ரூபாய் தண்டம்

போக்குவரத்து விதிமுறையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய பெண் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் வெள்ளிக்கிழமை (22) தீர்ப்பளித்தார். சாரதியனுமதிபத்திரம், வருமானவரிபத்திரம், காப்புறுதிபத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை, மோட்டார் சைக்கிளை பதிவு செய்யாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தை...

ஜெர்மனியிலுள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை

ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில் மர்ம நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அங்குள்ள தூதரகத்தின் ஊடாக விசாரித்து வருவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் மியூனிச் நகரில் வணிக வளாகத்தில்...

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சகல பட்டதாரிகளுக்கும் விரைவில் வேலை வாய்ப்பினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி, அகில இலங்கை பட்டதாரிகள் சங்க சமூகத்தின் செயலாளர் தம்பிக்க முனசிங்க தலைமையில் இந்த பேராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின்...

கண்டிய நடனம் புகுத்தியமையே மோதலுக்கு காரணம்!-டி.எம். சுவாமிநாதன்

யாழ்.பல்கலைகழகத்தில் வழமைக்கு மாறான நடைமுறை மேற்கொள்ளப்பட்டதே மாணவர்களுக்கு இடையிலான மோதலுக்கு காரணம் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிப்பின் இந்த மோதல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு...

தமிழ் படைச்சிப்பாயின் தாக்குதலுக்குள்ளான தந்தையும்,மகனும் வைத்தியசாலையில்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சோ்ந்த தந்தையும்,மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தொியவருவதாவது கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சோ்ந்த செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு...

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனக் கோரி போராட்டம்

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் முன் எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் கோரிக்கையுடன் ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக் இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை வவுனியாவிலும்,ஓமந்தையிலும்,மதியம் கிளிநொச்சி இரனைமடு படை முகாமிலும், பரவிபாஞ்சான் பிரதேசத்திலும் மாலை வலி வடக்கிலும் குறித்த போராட்டம் நடத்தபட்டுள்ளது....

மத்திய அரசின் கையாட்களாக இயங்கமுடியாது: வடமாகாண முதலமைச்சர்

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாகாண அரசாங்கம் இயங்கமுடியாது என உலக வங்கியின் அலுவலர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு மனோநிலை இல்லையாயின் பணியை சரிவர முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென்...
Loading posts...

All posts loaded

No more posts