யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல், கூட்டமைப்பு அதிர்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை தொடர்பாகவும் தாம் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்துக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்திரமே...

2 மாதங்களில் மருந்துகளின் விலை குறையும்!

மருந்துகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான நடைமுறை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்து தொடர்பான புதிய சட்டத்தில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடைமுறையின் அளவு குறைக்கப்படும் எனவும் சில நிறுவனங்களின் ஏகபோக உரிமை காரணமாக அவை மீறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மருந்துகளின்...
Ad Widget

மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை நீடிப்பு!

உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார். ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத்...

யாழ் பல்கலைக்கழகத்தில் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து கவலையடைவதாக அப் பல்கலைக்கழகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்ற கையெழுத்துடன் குறித்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்...

யாழ் பல்கலை மோதலை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டாதீர்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் என, மாணவர் சங்கம் அனைவரிடமும் கோரியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்று தொடர்பில் இரு குழுக்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பிரச்சினையை முன்னிறுத்தி சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக...

யாழ் பல்கலைக்கழக மோதல் ; விசாரணைக்குழு அமைக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரைணை மேற்கொள்ள தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரியரட்ணம், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு இடையில் நேற்றை மோதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழத்திற்கு முன்னால் மற்றும்...

70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ்...

இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்தார் சம்பந்தன்

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்' என்னும் கருத்தாய்வு இன்று மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்பதற்காக...

காணாமல் போனார் காரியாலயம் : கருத்தறியும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கருத்தறியும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு இன்று காலை 9.30 முதல் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக, காணாமல்போனவர்களின்...

பிராந்திய விமான நிலையமாக பலாலியை மாற்றுவதில் இந்தியா தீவிர

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்துவது தொடர்பில் களஆய்வை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமானத்தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கான களஆய்வுகளை இந்திய விமான நிலைய அதிகார சபை மேற்கொண்டு வருவதாக இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் எம்.எம்.சி.நிமல்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். விமான...

சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கணவனால் தீவைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) மாலை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயராஜா தர்சினி (வயது 24) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் வசிக்கும் இவ்விருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனினும் அண்மை...

நோயாளியின் மோதிரம் வைத்தியசாலை சிற்றூழியரால் அபகரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண்ணின் 1 பவுண் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியரால் சனிக்கிழமை (16) மாலை அபகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த முதிய பெண்மணி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு...

காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 5 வயதுச் சிறுவனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 15ஆம் திகதி காணாமற்போன காந்தரூபன் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் சிறுவனின் சடலம் இருப்பதாக, சனிக்கிழமை (16) இரவு பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்தே, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய...

யாழ் பல்கலை தாக்குதலுக்கு கண்டனம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளது. அணைத்து மாணவர்களுக்கும் சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என, அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார். அப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வவுனியா கிளையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய...

தமிழ், சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு...

சாவகச்சேரியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம்

சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடல்பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நேற்று இரவு குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்ணய விலையை மீறுவோருக்கு அரசு எச்சரிக்கை

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விநியோகிப்பதால், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாத நிலை ஏற்படுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச குறிப்பிட்டார். இதனால், கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக கண்காணிப்பதுடன், அத்தகையவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம்...

இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி தாக்கம்!

இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் எயிட்ஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்று அமைச்சர் ராஜித சேனாரதன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்...

யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு

மாநகர சபையின் தீயணைப்புச் சேவையைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்களை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி தீவிபத்து ஏற்படும் பட்சத்தில்,0213207777 மற்றும் 0777040126 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். குறித்த சேவை 24 மணித்தியால சேவையாகும். தீ விபத்து ஏற்பட்டு பரவ முன்பதாக ஆரம்ப நிலையிலேயே அறிவித்தால்...

கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்றது. அதில்...
Loading posts...

All posts loaded

No more posts