- Thursday
- May 7th, 2026
கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை...
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றமையால் குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்படவுள்ளது. முறைப்பாட்டினை வெளிநாடுகளில் உள்ள இலங்கை வாழ் அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லிணக்க பொறிமுறைகளை...
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது. முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்பாணம் ஐந்து...
இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட வடக்கு முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அங்கீகாரத்துக்காக நேற்று (26) அனுப்பி வைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் மீது கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி சபையில் விவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் இரண்டு மாதங்கள்...
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளள 460 ஏக்கர் காணியில் காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மத்தி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நலன்புரி நிலையங்களில் வாழும்மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படவுள்ள...
புத்தளம் - அநுராதபுரம் பாதையில் கருவலகஸ்வெவ மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலையில் வேன் மீது காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த காட்டு யானைத் தாக்குதலில் உயிரிந்துள்ளவர், யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த வேலாயுதம் தர்மராஜ் என்ற 39 வயதான நபர் என தெரிவந்துள்ளது.இதில் காயமடைந்த...
இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி,...
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது. இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சொந்த காணிகள் இல்லாத நிலையில் மீள்குடியேற்றப்பட்டு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காணிகளுக்கான உரித்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பலாலியில் நேற்று மதியம் குறித்த காணி உரிததுக்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு, அரசாங்கத்தினால்...
தமிழர் தாயகப் பிரதேசங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேறிய முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மீளக் குடியேற்றப்படுவதை தமிழர் தரப்பு ஒருபோதும் எதிர்க்காது என தெரிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், எனினும் வெளியேற்றப்பட்டவர்களை மீளக் குடியேற்றுவதாகக் கூறி புதிதாக திட்டமிட்ட சிங்கள, முஸ்லீம் குடி யேற்றங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிர தான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் இதனை கூறியுள்ளார். யாழ்....
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளை தடுத்து நிறுத்த, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அகற்ற முடியாது. எனினும், புதிதாக அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைகள் மற்றும்...
டீசல் லீற்றர் ஒன்றுக்கான உற்பத்திவரி 10 ரூபாயால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய வரியாக டீசல் லீற்றர் ஒன்றுக்கு 13 ரூபாய் அறவிடப்படும். இந்த புதிய வரி அதிகரிப்பு காரணமாக சந்தையில் உள்ள டீசல் விலை அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில்...
"எனது மனைவி, பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்."- இவ்வாறு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்க செயலணி அமர்வில் காமிது லெப்பை மீராசாகிப் (வயது - 78) என்ற வயோதிபர் தெரிவித்தார். அவர்...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்காக ஏற்கனவே கட்டாயப்படுத்தி வழங்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான மரண சான்றிதழ் மீளப்பெறப்பட்டு அதற்குப் பதிலாக 'காணமல் ஆக்கப்பட்டோர்' சான்றிதழை வழங்குவதற்கான திருத்தத்தை...
தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார். தற்போது அரச சேவையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 06 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன் பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதன்படி இந்த நடைமுறையை தனியார் துறைகளில்...
முகாம் வாழ்க்கையினை முடிவுறுத்தி சொந்த இடங்களில் வாழ்வதற்கான திட்டத்தின் முதற்படியாக காணி அற்றவர்களுக்கு காணி வழங்கும் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்நேற்று (26) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கொழுவல் இருப்பது உண்மை' என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (25) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் ஏற்பட்டு, அதனால் கொழுவல் ஏற்பட்டது உண்மை. அதனை நான்...
செய்தியை செய்தியாக பிரசுரியுங்கள் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று வியாழக்கிழமை (25), கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'கடந்த மாகாண சபை அமர்வின் போது ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன்...
கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான பாலங்களை அமைத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தினால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான மனரீதியான பாலத்தினை அமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
