- Friday
- May 8th, 2026
மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீ லங்கன் விமான நிலையம் மேற்கொள்ளும் என, மிஹின் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் உள்ள இரண்டு விமானங்களும் ஶ்ரீ லங்கா...
சிகரெட்டுக்கான விலை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை கூறியுள்ளார். இதேவேளை, பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்...
முதல் டெஸ்ட் போட்டியை போலவே 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் தொடரை வென்று, தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்...
வீட்டுப் பாவனை உட்பட சகல நுகர்வோர் பிரிவுகளுக்கும் 5 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு இலங்கை மின்சார சபை, இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த 06 மாத கால திட்டத்தின் படி இலங்கை மின்சார சபையின் மாதாந்த செலவு 850 மில்லியனினால் அதிகரித்துள்ளதாகவும், இதன்படி, எதிர்வரும் 06...
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற 3225 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் 1466 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். அத்துடன், சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் பட்டம் பெற்ற டிப்ளோமா பட்டதாரிகள் 2211 பேர் இவர்களில் உள்ளனர். இதில் 1014 பேர் தமிழ் மூலமான பட்டதாரிகள். இன்று ஆசிரியர்களாக...
யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்தே தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை பிரித்து போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
தம்மை கொலை செய்வதற்கு சதி செய்யப்படுவதாக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறையிட்டு அது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் இதுவரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்க பின்னடித்து வருகின்றது. இருப்பினும் முதலமைச்சர் நிதியத்துக்கான அனுமதியை விரைவில் அரசாங்கம்...
ரவிராஜ் அன்றைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார். லசந்த விக்ரமதுங்க நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். வெகு விரைவில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்.என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் நேற்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு...
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 03.10.2016 திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர் தெரிவித்தனர். அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத் என்ற பொறியியலாளர்...
பூனைக்குட்டியாக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை புலிக்குட்டியாகமாற்றியது நல்லாட்சி என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று(3) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் புலி உறுப்பினர்கள் வடக்கில் உள்ள இராணுவத்தினருக்கும், பௌத்தவிகாரைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் போது தற்போதைய அரசாங்கம் வாய்மூடிமௌனியாகப் பார்த்துக் கொண்டிருந்தமையினாலேயே விக்னேஸ்வரன் அவ்வாறுநடந்து கொண்டதாகவும்...
அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்தி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடயங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர்...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்தோடு, பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லையென்றும் மஹிந்த கூறியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, “இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதே, அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா?” என...
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன்,இன்று திங்கட்கிழமை(03) காலை அஞ்சலி செலுத்தினார் இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணம் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை, பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக சிங்கலே தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை வழங்கியதாக அதன் தலைவர் அஹுலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் (Simonetta Sommaruga) தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார். அவ்வாறு இல்லை எனின்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை...
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றித் தெரியவருவதாவது, வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும் அவர் தற்போது அங்கிருந்து 10ஆம் திகதி மாற்றலாகி ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்....
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் நேற்று (02) திறந்து வைக்கப்பட்டன. நேற்று மாலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி, மேற்படி நிகழ்விலும் இணைந்துகொண்டார். பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கமைய இந்த நீர் சுத்திகரிப்பு...
Loading posts...
All posts loaded
No more posts
