கள்ளத்தோணியில் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது

இலங்கையில் இருந்து கள்ளத்தோணி மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கள்ளத்தோணி மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த அவரை, தனுஷ்கோடி கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி வந்த குற்றத்தில், ‘கியூ’ பிரிவு பொலிஸாரிடம் குறித்த இலங்கையர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் பெயர் அருள்செல்வன் என்று...

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி இராஜினாமா

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சில கருத்துக்களை வௌியிட்டிருந்தார். ஜனாதிபதியின் குறித்த உரையே டில்ருக்‌ஷியின் இராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என, நம்பத்...
Ad Widget

மின் வெட்டு நேரம் குறைப்பு (முழு விபரம் இணைப்பு)

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றில் இருந்து (17) எதிர்வரும் 21ம் திகதி வரை காலை இரண்டரை மணித்தியாலங்களும் இரவு ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபை அறிவித்தது. எனினும், குறித்த நேரத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,...

எந்தெந்த நேரங்களில் மின் வெட்டப்படும் ; வலயங்களாக பிரிப்பு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் எற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக இன்று முதல் மூன்றரை மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. குறித்த மின் தடை கொழும்பு நகரத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலுக்கு வருவதாக மின்சாரசபை மேலும் கூறியுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதியிலிருந்து 21...

 பஸ்ஸை தாக்கி கொள்ளை

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி ஞாயிற்றுக்கிழமை (16) மாலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸை, யாழ். மாவட்டச் செயலகத்தை அண்மித்த பகுதியில் வழிமறித்து, சாரதி, நடத்துநர் மற்றும் பஸ் மீது தாக்குதல் நடத்தி, நடத்துநர் வைத்திருந்த பணம் மற்றும் ரிக்கெட் புத்தகம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். பயணி ஒருவரை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்டபோது,...

35 வருடங்களின் பின் அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புக்கள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனிடம்

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் பதவியை தற்போது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் வகித்து வருகின்றார். ஜனாதிபதி இந்தியாவின் கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பெல்ஜியத்திற்கு...

மீண்டும் வாள்வெட்டு கலாசாரம் : இரவுவேளையில் பதற்றத்தில் மக்கள்

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது அண்மைக்காலமாக மீளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் மூகமுடி அணித்த கும்பலொன்று வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்ததையடுத்து யாழ்.நகரில் பதற்றமான சுழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவ் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில்...

கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொள்ளைக்குழு அடித்து மிரட்டி கொள்ளை

கிளிநொச்சி – முழங்காவில் - பல்லவராயன் - கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று, கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அச்சுறுத்தி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளைக்குழு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் முப்பத்தாறு பவுண்...

கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் நான் முட்டாள் இல்லை: ஜனாதிபதி

கோத்தபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் அங்கிருந்துள்ளனர். இதன்போது சமகால நெருக்கடியாக மாறியுள்ள ஜனாதிபதியின் உரை தொடர்பில் அவர்...

என்னை துரோகியென சுட்டுக்கொல்ல போகின்றீர்களா-சுமந்திரன்

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்று சுமந்திரன்...

கல்விக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கவேண்டும்!

கடந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மிக கூடுதலான நிதியினை ஒதுக்குகின்றார்கள் அதனை போன்றுதான் இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியம் கொடுக்காது எதிர்வரும் ஆண்டுகளில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் கூடுதலான நிதியினை ஒதுக்கவேண்டும் என்று பணிவான வேண்டுகோளை விடுக்கின்றேன் என, சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ் தெல்லிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் சில மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களும், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு மணித்தியாலமும் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுளள்தாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

யாழில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குடிநீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் கீழ் அக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளருமான சபீக் ரஜாப்தீன்...

வலி வடக்குப் பிரதேச நிர்வாகம் மீதுபொது மக்கள் அதிருப்தி

அளவெட்டி வடக்கு கிராமியச் செயலகத்தின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வுகள் அண்மையில் கிராமசேவையாளர் க.கணேசதாஸ் தலமையில் நடைபெற்றன. இந் நிகழ்வில் அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வுக்கு வலி வடக்குப் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ஆன உதவிப்பிரதேச செயலர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த...

தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

தீர்வை வரி இன்றி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கமைய, இதுவரை 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணசபையினர் அரசியல் பேசக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள் பேசத் தேவையில்லை. இவர்கள் அபிவிருத்தியில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது என்று சிலரால் தொடர்;ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர்...

விபத்தில் காயமடைந்த வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார்

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் ஜெனதாஸ்  பசில் காலமானார். இவர் கடந்தவாரம் வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார். இவரது மனைவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார்.பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து  மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். ஈழத்தில் அரசபதவிகளில் உயர்...

அப்துல் கலாமின் ஆசிரியர்கள் யாழ். மண்ணை சார்ந்தவர்கள்

அப்துல் கலாம் யாழ். மண்ணிற்கு விஜயம் செய்தமை இங்குள்ளவர்களைப் போன்று நாங்களும் மிகப் பெருமையாகக் கருதுகிறோம் என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியக் குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.கே அப்துல் கலாமின் 85 ஆவது பிறந்த தின நிகழ்வு நேற்று(15) சனிக்கிழமை முற்பகல் யாழ். பொது...

யாழில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு!

இளவாளை பகுதியில் சுமார் 35 பொதிகளில் பொதியிடப்பட்ட கஞ்சா பொதிகள் இன்று காலை யாழ்.புலனாய்வுதுறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாக்களின் மொத்த பெறுமதியும் நிறையும் கணக்கிடப்படவில்லை என புலனாய்வுத்துறை பொலிஸார் தெரிவித்ததுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது மெற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

சுவரொட்டியை ஒட்டியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்!

கடந்த திங்கட்கிழமை இரவு மருதனார்மடம் பேருந்து தரிப்பிடத்தில் தேசியத் தலைவரின் படத்தினை ஒட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு மனநோயாளியென தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் இல்லையெனவும் தெரியவந்துள்ளது. குறித்த பெண் தொடர்பாக ஜேர்மனியில் வசிக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகப்புப் புத்தகத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,...
Loading posts...

All posts loaded

No more posts