Ad Widget

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் : டி.எம். சுவாமிநாதன்

கருணா , பத்மநாதன் போன்றோர் சுதந்திரமாக நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்று நாம் சிபார்சு செய்துள்ளோம் என்று மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது குறித்து மீள்குடியமர்வு சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்..

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பாரிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட கருணா , பத்மநாதன் போன்ற பலர் சுதந்திரமாக வெளியில் நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளோம்.

குறிப்பாக நீண்ட காலம் தடுப்பில் இருத்ததன் அடிப்படையிலும் இவர்களை மன்னிப்பின் அடிப்படையிலும் விடுதலை செய்யும் அதிகாரம் எனது அமைச்சிற்கு கிடையாது. ஆனால் அது ஜனாதிபதியினால் மட்டுமே முடியும். இதனால் தற்போது கைதிகளாக சிறையிலுள்ளவர்களில் பலரை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்ற பரிந்துரையை நாம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கடந்த காலங்களில் இது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அவகாசம் கோரப்பட்டிருந்த்து. அது நிறைவுறும் நிலையில் இதனை அவர்கள் கோரியிருக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றார்

Related Posts