ஆவா குழு உறுப்பினர்கள் மேலும் நால்வருக்கு விளக்கமறியல்

ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நான்குபேரை எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல உத்தரவிட்டுள்ளார். ரவிந்திரன் நிதர்ஷன், லோகநாதன் தர்ஷிகன், மகாதேவன் கந்தகன் மற்றும் ரவிந்திரன் நிலூஷன் ஆகியோரே விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஆவா குழு தொடர்பில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை மூவரும்,...

வரவுசெலவு திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

2017 ம் ஆண்டுற்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்காக நிதியமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கள மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2311 என்ற இலக்கமும், சிங்களம் மற்றும் ஆங்கில...
Ad Widget

வடமராட்சியில் நாளை கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிற்கும் தேசிய அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) வடமராட்சியில் கையெழுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான யாழ்ப்பாணத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த கையெழுத்து போராட்டமானது,...

அரசை எச்சரிக்கும் வடக்கு மீனவர்கள்!

கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் வட மாகாண தமிழ், முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தாம் எப்போதும் அமைதியாக காத்திருக்கப் போவதில்லை என்றும் மன்னார் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் மொஹமட் ஆலம் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவிற்கும், மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையிலான...

வானொலிக்குள் கைக்குண்டு!

வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடாத்திவரப்படும் கடையில் வானொலிக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர் கடந்த 3 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர்...

தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பெரும்பாலும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு-செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கவேண்டியது எனது கடமை!

தென்பகுதி மக்கள் சமஷ்டி ஆட்சிக்கும், வடக்கு மக்கள் ஒற்றையாட்சிக்கும் அச்சப்படுவதாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரண்டு சொற்பதங்கள் தொடர்பாக வாதம் நடத்திக்கொண்டிருப்பதை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய முறை தொடர்பில்...

யாழில் தொடரும் கைதுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின்...

தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள்

அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவ குழுவினால் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இதன்படி ஐம்பது பேர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் நேற்று (வியாழக்கிழமை) வரை முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த சத்திர சிகிச்சை குழு தெரிவித்துள்ளது. சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும்...

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

ஸ்ரீலங்கா அரசினால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில...

ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு?

தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM) மூலம் பணம் மீளப்பெறும் போது அறவிடப்படும் கட்டணம் 10 ரூபவாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட வாசிப்பின் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு தினத்தை முன்னிட்டு போதனா வைத்தியசாலை ஊழியர்களிடையே சைக்கிளோட்டப் போட்டியும் நடை பயணமும்.

உலக நீரிழிவு தினமானது வருடந்தோறும் நவம்பர் மாதம் 14ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய உலகை உலுக்கி வரும் தொற்றா நோய்களுள் மிக முக்கிய இடத்தை வகிப்பது நீரிழிவு நோயாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறை என்பவற்றினால் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் இன்று பல்கிப் பெருகி...

பல்கலைக்கழக கல்வியை தவறவிட்டவர்களுக்கு பாதீட்டில் வரப்பிரசாதம்

பல்கலைக்கழகத்தில் கற்கும் வாய்ப்பை ஒரு சில புள்ளிகளால் தவறவிட்ட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உயர்கல்வியை தொடர்வதற்காக, 8 இலட்சம் ரூபா வரை கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தில் 15 ஆயிரம் மாணவர்களை உள்ளீர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் வரவு செலவுத்...

வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுகிறார் ; ஜே.வி.பி

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார். வடமாகாண முதலமைச்சராக பதவி வகிக்கும் விக்னேஸ்வரன், இதுவரை தனது முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றவில்லை என்றும் தெரிவித்துள்ள ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர், தனது இயலாமையை மூடி மறைப்பதற்கே அவர் தற்போது...

யாழ் பல்கலைக்கழக மோதல் வழங்கு விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்த சிங்கள மாணவன் தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக...

மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கான விச ஊசி மருத்துவ பரிசோதனையில் இதுவரை 193 முன்னாள் போராளிகள் மாத்திரமே பங்கேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது. இதன்படி பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனை...

10 மாதத்தில் 13 இலட்சம் லீற்றர் மதுபானம் விற்று சாதனை!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 13 இலட்சத்து 28ஆயிரத்து ஐநூற்றி ஐந்து லீற்றர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்ரோபர் மாதம் வரையுமே பதின்மூன்று இலட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐந்நூற்றி ஐந்து லீற்றர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த மதுபானத்தில் பியர் வகை மதுபானமே அதிளவாக...

மக்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு குறைக்கப்படவில்லை என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்று சமர்க்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்ட அவர் நாடெங்கும் 30,000 தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வடக்கில் 10 வருட காலமாக சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக இவர்கள் பாடுபட்டு...

ஆவா குழு சந்தேகநபர் போதைப் பொருளுடன் கைது!

ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர்...

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை, நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த சமூக அபிவிருத்திக்காக பரந்த கொள்கையை அறிமுகம்...
Loading posts...

All posts loaded

No more posts