- Sunday
- August 3rd, 2025

சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதிதருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு...

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடமிருந்து சொக்லேட்டை வாங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன், குறித்த மாணவியின் அண்ணனால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் தனது வகுப்பு...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களுக்கு மாணவர்களால்...

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மொனராகலை - புத்தல பிரதேசத்தில் நிலநடுக்கம்...

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகனினால்...

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு...

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ கடந்த ஒரு வருட காலப்பகுதியில் 957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளனர். இதில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 197 பேர்...

தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் - உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது. திலீபனின் தியாகத்தை...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த ஆண்டு இந்திய மத்திய...

“யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”...

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகள் நடாத்தப்படுகின்றன. அந்தவகையில் குறித்த கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி...

வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று யாழ். வைத்தியசாலையின் பிரேத அறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,...

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உற்பத்தி செய்யப்படும் பக்கற் யூஸ், ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டமை கண்டறியப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. குறித்த பக்கற் யூஸை அருந்தும் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருப்பதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சுகாதார மருத்துவ...

தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்;து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துளளார். இதற்கு உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போது...

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் மீசாலைக்கும் - புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட தொடருந்து பாதையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள்...

023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கிணங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாற்றுத் திகதிகளை அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா காலத்தின்போது, உயர்த்தரப் பரீட்சைகள், சாதாரணத்தரப் பரீட்சைகள்,...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது. இதேவேளை இன்றைய தினம் கிளிநொச்சி மற்றும்...

All posts loaded
No more posts