மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

மாணவியைக் கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை என அவரது ஆசிரியர் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்து அம்மாணவி தனது தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் பாடைசாலைக்கு வந்த தந்தையும் அவரது நண்பரும் பாடசாலை வாசலில்...

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழக்கின்றனர்!

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுவதுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே முக்கிய காரணம் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
Ad Widget

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்! உயர் நீதிமன்றம் முன் கவனயீர்ப்பு போராட்டம்: வி.மணிவண்ணன்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்த முடிவு செய்து இருக்கின்றோம் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (04.10.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ”செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் இணையம் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக சமர்ப்பிக்கலாம். 2022...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இன்று திருத்தம் !

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை (4) மீண்டும் திருத்தப்படவுள்ளது. கடந்த தடவை, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3,127 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, தற்போது 1,256 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 2.3...

நாட்டை சூறையாடியவர்களுக்கு இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் வழங்கியுள்ளது: சுகாஷ்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நீதிபதி சரவணராஜா தொடர்பில் அவர் நேற்று(03.10.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வாழ்க்கை செலவு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காமல் இருப்பதாக சம்மேளனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்....

சரவணராஜா பதவி விலகியுள்ளமை தொடர்பான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்!!

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜா பதவி விலகியுள்ளமை தொடர்பான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து...

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி முடங்கிய யாழ் நீதிமன்றம்!!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றைய தினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின. யாழ்மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நேற்றைய தினம் ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின்...

தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில்...

வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதில் புதிய நடைமுறை!

வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு, எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறைக்கு வருகிறது. இந்த முறைமையின் ஊடாக, வீட்டில் இருந்தவாறு இணையத்தின் ஊடாக கட்டணங்களை செலுத்தி, வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்ததால் மின்சாரம் தடை!!

சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று இன்று திடீரென மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்ததில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம் : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து முடிவு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித தர்மசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மாதந்தோறும் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் ஒவ்வொரு தடவையும் மாற்றியமைக்க முடியாது என கூறினார். இலங்கை பெட்ரோலிய...

முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பா?

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அதற்கமைய பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆட்டோ டீசலின் விலை 10 ரூபாவாலும், சுப்பர்...

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் : உடனடி விசாரணைக்கு பணிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இன்று திங்கட்கிழமை அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ”நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கடிகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட...

சாவகச்சேரி விபத்தில் இளைஞர் பலி!

சாவகச்சேரி, நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின்...

உரிமைகள் கிடைக்கப்பெறும் வரையில் போராட்டங்கள் தொடரும்!!

நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது என நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்கர்ட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்...
Loading posts...

All posts loaded

No more posts