Ad Widget

நாடளாவிய ரீதியில் காற்றின் தரம் குறித்து விசேட எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு சரிந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மைய மதிப்பீட்டின்படி, நுவரெலியாவைத் தவிர, ஏனைய அனைத்து மாவட்டங்களும் ஆரோக்கியமற்ற காற்று நிலைமைகள் காணப்படுவதாக அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின் தரவுகளை மேற்கோள் காட்டி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் மாத்தளை ஆகிய எட்டு மாவட்டங்களை காற்றின் தரம் குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் தமது வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts