Ad Widget

யாழில் தவறான முடிவெடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(11.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது டச்சு வீதி மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பேரம்பலம் புனிதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்து வரும் நிலையில் இவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது.ஆகையால் இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்றையதினம்(11) அவரது இல்லத்தில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Posts