டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம்!

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் மார்ச் மாதம் 29ம் திகதி முதல் ஏப்பிரல் 4ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்படும் என்று டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மழை பெய்த போதிலும் மின்னுற்பத்திக்கான நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் 6 மாத காலப்பகுதிக்கான மின் உற்பத்திக்கு மேலதிகமாக 51 பில்லியன் ரூபா செலவிட வேண்டி ஏற்படுமென்று மின்சார சபை கணக்கிட்டுள்ளது. இந்த செலவுத் தொகை பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட...
Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்... கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்று நோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் குறிப்பாக டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு...

பட்டதாரிகள் பிரச்சினைக்கு இந்த மாத இறுதிக்குள் தீர்வு

வடக்­கில் யாழ்ப்­பா­ணம் தொடங்கி கிழக்­கில் திரு­கோ­ண­மலை வரை விரி­வ­டைந்­துள்ள பட்­ட­தா­ரி­க­ளின் போராட்­டம் தொடர்­பாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரப் பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தின் யாழ் மாவட்ட இணைப்­பா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அங்­க­ஜன் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அந்த அறிக்­கை­யி­லேயே அவா் தெரி­வித்­துள்­ள­தா­வது, இன்று யாழ்ப்­பா­ணத்­தில் பட்­ட­தா­ரி­க­ளால் சுழற்­சி­ மு­றைப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு நடை­பெ­று­கின்­றது .இது கிழக்­கி­லும் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பட்­ட­தா­ரி­க­ளி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டும்...

முன்னாள் போராளிகளை கண்காணியுங்கள்! : ஜனாதிபதியிடம் கருணா கோரிக்கை!

வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழ் தரப்பினர் தொடர்ந்தும் கோரி வருகின்ற நிலையில், இரு மாகாணங்களிலும் ராணுவத்தின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 14 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கண்காணிப்பதற்கு...

“சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”

கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பஞ்சாட்சரம் கணேசனை மாற்ற வேண்டாம் எனக்கூறி பாடசாலை சமூகத்தினரால் இன்று காலை 7 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. “சீ.வீ.கே உறவினருக்காக பாடசாலையை சீரழிக்காதே”, ” வடமாகாண முதல்தர பாடசாலையை சீரழிக்காதே”, “வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு கொக்குவில் இந்துவின் வளர்ச்சி பிடிக்கவில்லை”, “வேண்டும் வேண்டும் இந்த அதிபர் எமக்கு வேண்டும்...

சைட்டம் போதனா வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும்! -ராஜித

தனியார் மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் சைட்டம் போதனா வைத்தியசாலை, விரைவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி ஜனாதிபதி...

இலங்கை தனியார்துறை ஊழியர்களுக்கு விரைவில் ஆயுள் காப்புறுதி

ஆபத்தான தொழிற்துறைகளில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதியை கட்டாயமாக்கும் வகையிலான சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஊழியர் ஒருவர் மரணமடையும் போது செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் தொழிற்சாலை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் கைத்தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும்...

காணாமல் போனோரின் உறவுகள் இன்றும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோரின்...

சம்பந்தனையும், சுமந்திரனையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும் -கஜேந்திரகுமார்

ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்பதற்காகவே. உண்மையாக ஐநாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது எனில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனையும் அவர்களது கூட்டதினரையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இல்லாவிடில் தமிழ் இனத்திற்கு எவ்வாறான...

அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி

தற்போதைய அரசாங்கமும், அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தென் மாகாணத்தை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எதிர்வரும் 22ஆம் திகதியன்று, இவ்வாறான பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளன என்று ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது, அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதுடன் அவர் கேர்ணல் தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டனர். இந்தச் செயற்பாட்டுக்கு ஐக்கிய...

சிசுவை குழி தோண்டி புதைத்த யுவதி

கிளிநொச்சி - ஆணைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி தான் பிரசுவித்த குழந்தையை தனது வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடை யுவதி மகப்பேற்றின் பின்னர் ஏற்பட்ட கடும்...

இரு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான சமஸ்டித் தீர்வு வேண்டும்

அரசியல் தீர்வானது தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்டு இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான ஒரு சமஸ்டித்தீர்வு அமைய வேண்டும், அந்த இலக்கை நோக்கி எமது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ளது. கட்சியின் வருடாந்த தேசிய மாநாட்டு பிரகடனம் நேற்று வௌியிடப்பட்டது. குறித்த பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது....

என்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம்: யாழில் ஜனாதிபதி

என்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம், எனது வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்து உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017ம் ஆண்டு...

நல்லாட்சியில் தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் மிகவும் குறைவு: மாவை

தமிழ் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் மிகவும் நம்பிக்கையுடனும் கனத்த மனதுடனும் உங்களை சந்திக்கிறேன். உங்களது நல்லாட்சியிலும் தமிழ் மக்கள் பெற்றிருக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ‘ஐனாதிபதியிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் இன்று ஜனாதிபதியினால்...

மனித சங்கிலி போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்துகொண்டனர். மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டு...

காணாமல் போனோரின் உறவுகளை ஏமாற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை முன்னிட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபகுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும்...

சுமந்திரனை இருத்திவைத்து போட்டுத்தாக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்(காணொளி)

"இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி...

‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் யாழில் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் ‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டு அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற குறித்த திறப்பு விழாவில், அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ; கூட்டமைப்பு வரவேற்பு

சர்வதேச பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த அறிக்கை, ஏற்றுக்கொண்டிருந்தாலும், பல முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் முன்னேற்றங்களை எட்டத் தவறியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts