வடமாகாணத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு! : இராதாகிருஷ்ணன்

தமிழர்கள் செறிந்துவாழும் வடமாகாணத்தை நாம் நழுவவிட்டால் ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் சாத்தியக்கூறு உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் மதிப்புக்குரிய ஒரு தலைவர், அதேபோல் இரா.சம்பந்தனும் மரியாதைக்குரியவர். இந்நிலையில் இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முனைகின்றன. மட்டக்களப்பு பன்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்புக்கள்!

வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக தற்காலிகமாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் முதலமைச்சர் நேற்று(புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது....
Ad Widget

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சு: 30 பேர் காயம்

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களினால் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சுகாதார...

காணாமல் போனோர் விடயத்தில் ஈ.பி.டி.பி.க்கு நேரடி தொடர்புண்டு: சரவணபவன்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில்...

பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் கைது

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தேரரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய பல சேனா அமைப்பின்...

வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...

ஜனநாயக மரபுகளை காப்பாற்ற சிவஞானம் பதவி விலக வேண்டும்: சுரேஷ்

வடக்கு மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனநாயக மரபுகளைகாப்பாற்றி பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவைத்தலைவருக்கு அரசியல்ரீதியான மரபுகளும், நடைமுறைகளும் நிச்சயம் தெரிந்திருக்கும். வடக்கு மாகாணசபை பிழையான...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் துணுக்காய் பாண்டியன்குளம் கிராம அமைப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் துணுக்காய் பாண்டியன்குளம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 20-06-2017 சமகால அரசியல் நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்களை கீழ் உள்ள காணொளியில் பார்வையிடலாம். https://www.youtube.com/watch?v=nAkew2i-oTM&feature=youtu.be

யாழில் கொள்ளை குற்றசாட்டில் கணவன் மனைவி உட்பட நால்வர் கைது

யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய்...

கடமையில் இருந்து நடுநிலைமை தவறவில்லை என்கிறார் சி.வீ.கே

அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அவைத்தலைவர் ஆளுனரிடம் கையளித்தமை சட்டத்திற்கு முரணானது என வடமாகாண முதலமைச்சர் கூறிய கருத்து தொடர்பில் அவைத்தலைவரிடம் வினாவிய போதே அவர் அவ்வாறு...

சம்பந்தன் எழுத்து மூலம் அறிவிக்கவில்லை!-ஆளுநர் ரெஜினோல் குரே

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவில்லை என, ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தன் தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ள போதிலும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக அண்மையில்...

அவைத்தலைவரின் நிலை என்ன?

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்...

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு

வவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரி அருகாமையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்த சிலையை திறந்துவைத்தார். குறித்த திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை

புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன்போது, புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின்...

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 6.28 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது....

நடு வீதியில் வைத்து மாணவி மீது ஊசி ஏற்றிய கொடூரம்!

கந்தளாய் - பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவர் இவ்வாறு அவர் மீது ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.உந்துளியில்...

இம்மாதம் 22,23, 24 ஆம் திகதிகளில் கடும் மழை

இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாகவும், இதனால், ஏற்படும் வெள்ளம் மற்றும் மண் சரிவு என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற, முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார். இந்த தயார்படுத்தல்,...

புதிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்: அரசாங்கம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய...

கடன் அட்டைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

கடன் அட்டைகளுக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தினை, மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை வணிக வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் வருடாந்தம் நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டிருந்த வட்டி வீதம், எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி முதல் 28 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts