- Sunday
- May 17th, 2026
இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்ஸ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தமது காணாமல் போன உறவுகள் பற்றி உண்மையைத் தேடும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்...
டெங்கு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு நடாத்தப்படும் இரத்தப் பரிசோதனையை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளின் பரிசோதனை நிலையங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்க 90 நிமிடங்களை அரச வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன. நோயாளர்களை அவசரமாக...
இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் நேற்று (20) உத்தரவிட்டார். காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர்...
ஓட்டிசம் என்பது பிள்ளைகளின் விருத்தியோடு தொடர்புடைய உளத் தொழிற்பாடுகளை பாதிப்படையச் செய்கின்ற ஒரு நிலையாகும் என வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அப்பலோ வைத்தியசாலையில் ஐந்து மணித்தியால இருதய சத்திர சிகிச்சையின் பின்னர் ஓட்டிசம் பற்றி என்னால்...
வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடாக நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தலை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீள ஆரம்பிக்க வழிசெய்ய ஜப்பான் எதிர்பார்த்துள்ளது....
யாழ். ஊர்காவற்துறை மாணவி வித்யா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார். இதன்படி, லலித் ஜயசிங்கவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கான தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை)...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினுள் செல்லும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முதன்முறையாக நேற்று (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் முறையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குறித்த சாட்சியப்பதிவு இடம்பெற்று வருகின்றது. வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ள நிலையில்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பீதியை கிளப்பிய ‘கிறீஸ் மனிதன்’ தற்போது தென்னிலங்கையில் உலாவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ‘கிறீஸ் பேய்’ என அழைக்கப்பட்ட இவ்வகையான மனிதர்கள், உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக்கொண்டு, குறிப்பாக பெண்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தற்போது களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக...
அரசியல் சாசனம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கு இடையிலான அரசியல் பேதங்களை களைந்து, புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முனைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இணக்கப்பாட்டின்...
வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில், நள்ளிரவு வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை கடத்த முற்பட்ட 5 இளைஞர்களை, அப்பகுதி மக்கள் பிடித்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வல்வெட்டித்துறை இமையாணன் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து, 16 வயதுடைய மாணவியை 5 இளைஞர்கள் இணைந்து கடத்த முற்பட்டுள்ளனர். இதன்போது, மாணவியின் தாயார் கூக்குரல் இட்டதால் தாயாரை அவ்விளைஞர்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரும் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவுக்கு, எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு மற்றுமொரு திகதி குறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மேன்முறையீட்டு மனுவை, பரிசீலனைக்கு எடுத்துகொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த மனுவுக்கு எதிர் ஆட்சேபனையை தெரிவிப்பதற்கு,...
அரச வேலைவாய்ப்பு கோரி கடந்த 143 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். குறித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாத காலத்திற்குள் தமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனையின்...
நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சமூக ஊடக வலைத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில்...
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயம் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற நிகழ்வுகள் துயரம் மிகுந்தவையென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான சம்பவங்களை இனியும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார். நாட்டை மிரட்டும் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவையாக இவ்வாறான செயல்கள் அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறான பல குற்றச்செயல்கள் கடந்த காலங்களில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். பாணந்துறை நகர சபை...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சுவிஸ்குமாரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தவோ, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கோ உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான ரஞ்சித் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். வித்தியா கொலை வழக்கின் இரண்டாம் கட்ட சாட்சியப்பதிவின் இரண்டாம் நாளான...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வலுவாக இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் சிங்களத்தை பெரும்பான்மையாக பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின்...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக, ஊர்காவற்துறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகஜனை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், அவர்...
பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல்நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதியென 18.07.2017 திகதியிடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல்நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். பொருட்களை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்தியதாக கூறப்படும் படகு முல்லைத்தீவு கடலில் இருப்பதாக வௌியான தகவல்களில் உண்மையில்லை என, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படகு அண்மையில் முல்லைத்தீவு கடலில் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதுஎவ்வாறு இருப்பினும், இந்தத் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என, கடற்படை ஊடகப்...
Loading posts...
All posts loaded
No more posts
