- Sunday
- May 17th, 2026
வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014...
சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பெறுபவர்களின் எண்ணிக்கை கூட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் தாங்கள் பெறும் சமுர்த்தி உதவிகள், மற்றும் தங்கள் பெயர்கள் வெட்டப்படுகின்றன என முறைப்பாடுகள் செய்கின்றனர். குறிப்பாக...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியமை தொடர்பாக, இரு அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்த் தெரிவித்துள்ளார். யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார், கொழும்பிற்கு தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கு, யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நேற்று...
செஞ்சோலைப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14-08-2016) இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேற்படி நிகழ்வுகள் வள்ளிபுனம், முல்லைத்தீவில் (தாக்குதலுக்கு உள்ளான செஞ்சோலை வளாக வீதி) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது கடந்த 2006ஆம்...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர். நேற்றயதினம் அதிகாலை நெடுந்தீவு, காரைநகர் மற்றும் காங்கேசன்துறை ஆகிய கடற்பகுதிகளில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் சமிந்த வலாகுளுக்கே தெரிவித்தார். குறித்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 12 றோலர்...
ஆவாகுழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் மேற்படி கேள்வியை எழுப்பினார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆவாகுழுவின் தலைவர்...
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழு தலைவர் உள்ளிட்ட ஆறு பேரையும் 48 மணித்தியாலங்கள் காவலில் வைத்து, யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் பிணை மனுவை, யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் சார்பில் பிணை மனு, நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இக் கொலை தொடர்பான விசாரணை நடைபெற்று...
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ். நல்லூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி துப்பாக்கிப்...
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத...
கதிர்காமத்தில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளதை அடுத்து, இதனை கவனிக்காத, பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பஸ்ஸின் சில்லுகளில் சிக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...
நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்ட, 2,230 பரீட்சை மத்திய நிலையங்களில், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள், இன்று (08) ஆரம்பமாகின்றன என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த பரீட்சைகளில், 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர், இம்முறை தோற்றவுள்ளனர். அதில், 220 பேர் விசேட தேவையுடைவர்களுக்கான விண்ணப்பத்தாரிகளாவர் என்று, பரீட்சைகள் திணைக்கள...
வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு...
வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல்...
கொக்குவில் பகுதியில், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொக்குவிலைச் சேர்ந்த விக்டர் நிசாந் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முக்கிய சந்தேக நபர்கள் கைது...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் உள்ள கிணற்றில் இருந்து மேலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் கிணறுகள், மலசல கூட குழிகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டு வந்தன. இதேவேளை அண்மையில் ஆனையிறவு பகுதியில் இவ்வாறு பெருமளவிலான மோட்டார் குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட மாகாண சபையின் அமைச்சரவை நெருக்கடியால் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையேயான நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு...
ஆவா குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நிஷா விக்டெர் என்பவர் ஆவா குழுவின் தலைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டில்ரூக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்....
யாழ். குடாநாட்டில் தொடரும் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது குறித்து நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய...
Loading posts...
All posts loaded
No more posts
