Ad Widget

தேடுதல் வேட்டையில் 100பேர் கைது!! அடையாளம் தெரியாத 31 மோட்டார் சைக்கிள், வேன்,லொறி மீட்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை (07) 6.00 மணி வரை இரு நாட்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத 31 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மோட்டார் கார், ஒரு வேன், லொறியொன்று என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், பேதுருதுடுவ, மனிப்பாய், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகள் ஐந்தில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts