Ad Widget

யாழ். வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கைது!

கொக்குவில் பகுதியில், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொக்குவிலைச் சேர்ந்த விக்டர் நிசாந் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் அறுவா் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவத்திற்கும் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts