- Monday
- May 18th, 2026
வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று வடக்கு மாகாணசபையில் அடிபட்டுக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலத்தில்...
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா...
நெடுந்தீவு வைத்தியசாலையினுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து தருவதோடு, அங்கு நிரந்தர வைத்தியர்கள், மற்றும் தாதியர்களை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குடாநாட்டில் தீவுகளில் ஒன்றாகக் காணப்படும் நெடுந்தீவு வைத்தியசாலையில் அடிக்கடி வைத்தியர் இன்றிக்காணப்படுவதால் இந்தப்பிரதேசத்தில்உள்ள சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ தேவைகளைப் பெறுவதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேற்படி வைத்தியசாலை...
ஆவா குழு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் பாழடைந்த தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை முகாம் படையணி ஒன்று இந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளது. உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் காணப்படுவதாக அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை...
யாழ். வடமராட்சி இரும்பு மதவடியைச் சேர்ந்த நபரொருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையமொன்றுக்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணாமையால் திகைப்படைந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் நெல்லியடிப் பொலிஸாருக்கு முறையிட்டார். இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நெல்லியடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் நெல்லியடி...
யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில், சாவகச்சேரி , கிராம்புவில் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கடனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாவை...
கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 21வது கடற்படை தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தற்போது கடற்படை தளபதி பதவியை வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.
வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,...
வட மாகாண சபையின் செயல் திறனற்ற செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரினால் அவையில் கூறப்பட்ட பதில்கள் என்னால் முன்வைக்கப்பட்ட வினைத்திறனற்ற செயற்பாடுகளைத் திசை திருப்பும் வகையில் அமைந்திருக்கின்றதே அன்றி என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களிற்கான ஆக்க பூர்வமான பதில்களாக அமைந்திருக்கவில்லை. என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குறிப்பிட்டு உள்ளார். எதிர்க்கட்சி தலைவரினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட...
தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள...
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் மற்றும் வடாமாகாண முதலமைச்சர் ஆகியோர் தலையிடுவதற்கு அமைச்சர் றிஷாட் பதியூதீன் தடையாக உள்ளார் என கூறியிருக்கும் வட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், மேற்படி காணிகளை மீட்க முடியாமைக்காக அமைச்சர் றிஷாட் பதியூதீன் பதவி துறக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
வட...
கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை அங்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள், அம் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக கடந்த 179 நாட்களாக இம் மக்கள்...
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தடை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அஸ்பெஸ்டஸ் மற்றும் புகையிலை தடைக்காக அரசாங்கம் செயற்படும்...
இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். அதேவேளை 150 சீசீ இற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நூற்றுக்கு 90 வீதத்தால் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்....
இராணுவத்தினரின் உதவியுடன் வடக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தென்னிலங்கை பகுதியில் தீவிரமாக பரவியுள்ள டெங்கு நோய், வடக்கிற்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சி நகர்...
யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு வேலிகளும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லைகளை போட்டு பாதுகாப்பு...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது இறுதி நம்பிக்கையாக தென்னிலங்கை மக்களை நாடியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம், 179வது நாளாகவும் நீடிக்கின்றது. இந்நிலையில், கொழும்பிற்கு சென்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், இன்றைய தினம்...
”கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வித்தியாலயம், சிங்கள வித்தியாலயம், முஸ்லிம் வித்தியாலயம் என்று தனித்தனியே பாடசாலைகள் அமைக்கப்படாமல், சிறிசேனவும் நடராசாவும் முகம்மட்டும் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். அதுவே நல்லிணக்கத்திற்கு சிறந்த வழியாக அமையும்” என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரச...
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட நிறைவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தரமுயர்த்துவதற்கு பாடுபட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்...
பாப்பரசரை போல பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காகவே வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார் என, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 102ஆவது அமர்வு, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சருக்கும் மாகாண எதிர்க்கட்சித்...
Loading posts...
All posts loaded
No more posts
