கிளிநொச்சியில் மீண்டும் வாள் வெட்டுச்சம்பவம்: அறுவா் காயம்!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்....

கிளிநொச்சியில் புலிகளின் கொள்கலன் மீட்பு!

கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் குறித்த கொள்கலனில் எவ்வகையான பொருட்கள் இருந்திருக்கலாம் என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தற்போது பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த கொள்கலனை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெற்றுக் கொள்கலன் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து...
Ad Widget

வித்தியா படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்களை ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார்!!!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ள சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க, மிகவும் பிரபல்யமான ஒருவர் செயற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்ட அசாத் சாலி, உண்மையான குற்றவாளியை கைதுசெய்ய அரசாங்கம்...

பதவிகளை பங்குபோடுவதிலேயே எமது காலத்தினை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்: தவராசா

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் போது, வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எடுத்துரைத்தால் மாத்திரமே சாதகமான பலன்களை எட்ட முடியுமென வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து...

வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு புதிய வழி: இராதாகிருஷ்ணன்

வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வடக்கு, தெற்கு உறவு ஒரு காலத்தில் சவால் மிக்கதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின்...

மஹிந்தவின் அரசாங்கத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக இருந்தனர்: கமால் குணரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக இருந்ததாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், ‘ ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “தமிழ்,...

தமிழர்களின் சிந்தனையில் ஆயுத கலாசாரம்! :பொலிஸ்மா அதிபர்

கடந்தகால யுத்தம் காரணமாக ஆயுத கலாசாரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வடக்கு மக்களின் மனநிலையில், மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக்கலாசாரத்துடன் கலந்ததென குறிப்பிட்ட அவர், இந்த மனநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியமென மேலும் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு...

நாட்டில் இன்றும் காற்றுடன் கூடிய மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் சிறிய காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய மலைநாடு மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல் மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடான ஹம்மாந்தோட்டை...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய பாலைய்யா சுதாகரன் என்பரரே உயிரிழந்துள்ளார்....

காணாமல் போனவர்கள் விடயத்தில் ஜனாதிபதியின் நிலை என்ன? ஜரோப்பிய பிரதிநிதிகள்

நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை நோக்கி ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தம்மால் அதனை உறுதியாக கூற முடியாது எனவும், அவரால் அவ்வாறு எதனையும் செய்ய முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்...

அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் சலுகை!

போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்...

ராணுவத்தால் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன : முதலமைச்சர்

”வடக்கு கிழக்கில் ராணுவத்தால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய எத்தனையோ பலாத்காரங்களும் கொலைகளும் வெளிவராமல் போய்விட்டன” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாணவி கிருஷாந்தி படுகொலையின் 21ஆவது வருட நினைவுதினம், அவர் கொலையுண்ட செம்மணி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந் நினைவு தின நிகழ்விற்கு அவர் அனுப்பிவைத்திருந்த செய்தியிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்....

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!!

மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில்  இன்று,  8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.இதனை தொடர்ந்து 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த நாடுகள் மெக்ஸிகோ, கொத்மாலாவ, பனாமா, ஏல் செல்வோதொரய, கொஸ்டரிகா, நிகாரகுவா, ஹொன்ரோஸ், எக்குவடோர் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பானுக்கு சொந்தமான பொனின் தீவிற்கு அருகில்...

18 வய­துக்­கு மேற்­பட்­டோ­ருக்கு வரிக்­கோவை இலக்கம்! இலாபம் பெறும் புண்­ணி­யஸ்­த­லங்கள் மீது வரி!!

இலங்­கையில் 18 வய­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு உல­க­ளா­விய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். எனினும் இவர்கள் மீது வரி சுமத்­தப்­ப­டாது. இந்த இலக்­கத்தை கொண்டு சிகி­ரியா மற்றும் நூத­ன­சா­லை­க­ளுக்கு இல­வ­ச­மாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்­கு­களை இல­கு­வாக திறக்க முடியும் என நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில்...

வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது - 14) என்ற பாடசாலை மாணவி நேற்று முன்தினம்...

விரிவு படுத்தப்படவுள்ளது இலவச Wi-Fi வழங்கும் திட்டம்!!

இலங்கை பூராகவும் இலவச Wi-Fi (இணைய வசதி) வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட வளமான நாடு மாநாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களை மேம்படுத்துதல் மற்றும் உறவுகளை வளர்க்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இது விரிவுபடுத்தப்படவுள்ளது. இலவச Wi-Fi வழங்கும் மண்டலங்களை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. பொருளாதார...

போக்குவரத்துக் குற்றங்களுக்கு வழங்கும் சீட்டுகளை பொதுமக்களுக்கு விளங்கும் மொழியில் வழங்க நடவடிக்கை!

போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு...

முன்னாள் போராளிக்கு உதவிய வடக்கு ஆளுநர்!

முன்னாள் போராளி ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியளித்துள்ளார். ஆளுநர் ரெஜினோல் குரே வாரம் தோறும் முன்னெடுத்துவரும் மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் (புதன்கிழமை) யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஆளுநர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த முன்னாள் போராளி...

பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

யுத்த குற்றம் மற்றும் அதற்கு பின்னராக விடயம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இலங்கை படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருவதாகவும்,...

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 100 வாக்குகளால் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக 41 வாக்குகள் பதிவாகியுள்ளது. வரிமுறையினை இலகுப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதே இந்த புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் பிரதானம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று...
Loading posts...

All posts loaded

No more posts