Ad Widget

மஹிந்தவின் அரசாங்கத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக இருந்தனர்: கமால் குணரத்ன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வடக்கு மக்கள் நிம்மதியாக இருந்ததாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், ‘ ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ராணுவத்தினர் யுத்தம் செய்தார்கள், துயர்களையும் தாங்கிக்கொண்டார்கள். வடக்கு மக்களுடன் நாம் இருந்தோம். அவர்களுடைய மனநிலைகள் குறித்து எமக்கு தெரியும். அவர்கள் கோரியது மகிழ்ச்சியான வாழ்க்கையையே, அவர்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கான சந்தோசமான சூழலையே விரும்பினார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நாம் அவர்களுக்கு அந்த வாழ்க்கையை பெற்றுக்கொடுத்தோம், சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தோம், தற்போது வடக்கில் குண்டு வெடிக்கவில்லை, மக்கள் பயந்து பங்கர்களுக்குள் மறையவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றார்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்றபின்னர் தீவரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை” என கூறினார்.

Related Posts