இலங்கையின் மருத்துவத்துறையில் மற்றுமோர் அத்தியாயம்!! நாடு முழுவதிலும் ஹெலிஹொப்டர் அம்புலன்ஸ் சேவை!!

இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் இருந்து இலங்கை மக்கள் விமான அம்பியுலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சேவையை அமுல்படுத்த, அமெரிக்காவிடம் இருந்து 8 விமான அம்புலன்ஸ்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்....

கொள்கையுடன் செயற்படுவோருக்கு ஆதரவளிக்க தயார்: கஜேந்திரகுமார்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த கொள்கையுடன் நேர்மையானவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சியொன்றை ஆரம்பித்தால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அவ்வாறு அவர் கொள்கையுடன்...
Ad Widget

இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: முதலமைச்சர்

இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு...

இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1990 ‘சுகப்படுத்தும் சேவை’ இலவச அம்புலன்ஸ் சேவை பொலிஸ் நிலையங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன. பொலிஸ் – நீதி விசாரணைக்குட்படுத்தப்படவேண்டிய சம்பவங்களுக்கு அம்புலன்ஸ சேவை வழங்கப்படும் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அல்லது இருவர் கடமையில் அமர்ப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு உள்பட நாடுமுழுவதும் இலவச அம்புலன்ஸ் சேவையை வழங்க இந்திய அரசு 22.5...

வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு!!

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது....

செம்­மணி புதை­குழி விவ­கா­ரம் : பொலி­ஸார் ஒத்­து­ழைப்­பின்மையினால் அகழ்­வுப் பணி­கள் தாம­தம்!!

செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப் பிர­சன்­ன­மா­னார். பொலிஸ் குற்­றத் தடுப்­புப் பிரி­வின் பொறுப் ப­தி­காரி சம்­பவ இடத்துக்கு வருகை தர­வில்லை. மேல­திகஅகழ்­வுப் பணி­க­ளும் பரி­சோ­த­னை­க­ளும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. நீர்த்­தாங்கி அமைப்­ப­தற்­காக செம்­ம­ணி­யில் கடந்த வெள்­ளிக் கிழமை நிலம் அக­ழப்­பட்­டது. மனித எலும்­புக்­கூட்டு...

ஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: முதலமைச்சர்

ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வரன்...

நீதிபதி இளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை!

நல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்பாதுகாவலரின் ஒரு வருடநினைவஞ்சலி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலராக பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சரத் பிறேமசந்திரவின் ஒரு வருட நினைவஞ்சலியில் நீதிபதி மா.இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது இளஞ்செழியன் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சரத் பிறேமசந்திரவின் உருவப்படத்திற்கு மாலை...

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்? – ரணில் கேள்வி

45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,...

பாரிய போராட்டத்துக்கு தயாராகும் கல்வி நிர்வாக சேவை!

கல்வித்துறை அரசியல் இலாப நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சேவை சங்கம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளன. அரசியல் இலாபத்திற்காக 1018 பேருக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையை உடனடினாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன....

யாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு

யாழ். சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை விரைந்து முன்னெடுக்குமாறு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரீசன் அதிகாரிகளை பணித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எதிர்க்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான யாழ். மாவட்டத்திற்கான சமுர்த்தி உத்தியேகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. யாழ். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.மகேஸ்வரன் தலைமையில் யாழ். நீராவியடியிலுள்ள...

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கள் 26ஆம் திகதி மீளவும் பணிப் புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டி ஆசிரியர் சங்கம் உள்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் திகதி சுகயீன...

அதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்

வடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு பகிரப்பட வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் வடக்கு விஜயத்தை தொடர்ந்தும் யாழில் வன்முறைகள்...

பேராயர் டானியல் தியாகராஜா ஒதுங்கும்வரை யாழ்ப்பாணக் கல்லூரிக்கான நிதி கிடையாது!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குத் தொடர்ந்தும் நிதி வழங்குவதற்கு அமெரிக்காவில் இருக்கும் தர்மகர்த்தா சபையினர் முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துக் கடிதம் ஒன்றினை நேற்று இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபைக்கு அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும், சபையின் உப...

யாழ்.தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம், கொக்குவில் தொழிநுட்ப கல்லூரியின் பதிவாளர் அதிகார முறைகேட்டில் ஈடுபடுகின்றார் என்றும் அதற்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் ஒன்றியத்தால் நேற்று கற்றல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொழிநுட்ப கல்லூரியின் பெண் பதிவாளரின் சகோதரர் பொலிஸில் பணியாற்றுகிறார் என்றும் அவரின் வழிநடத்தலில் யாழ்ப்பாணம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரி கல்விசார்...

மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ராணுவ புலனாய்வு முகாம் இயங்கிய காணிக்குள் மீட்பு

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு இராணுவப் புலனாய்வாளர்கள் அவற்றை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆட்சிக்காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கியது. வெள்ளை...

செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு: பிரதேசத்தில் பதற்றம்!

செம்மணிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மனித எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த பகுதியில்...

மாகாணசபையைக் குழப்புகின்ற சூத்திரதாரிகளுக்கு மக்களே நாளை தீர்ப்பெழுதுவார்கள் -பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களாக நாங்கள் தெரிவாகியபோது மாகாணசபைக்குரிய அதிகாரங்களை வைத்துப்பெரிதாக எதையும் சாதிக்க இயலாமற்போனாலும் சிலவற்றையாவது செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்தோம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே இருக்கக்கூடிய சாதாரண முரண்பாடுகளைப் பூதாகரமாக்கி உள்ளே நுழைந்த தீயசக்திகள் மாகாணசபையின் ஒற்றுமையைச் சீர்குலைத்ததால் எதனையுமே முழமையாகச் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று முதலமைச்சரே நீதிமன்றப்படி ஏறும் நிலை தோன்றியுள்ளது....

வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது!!

அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அந்த வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் கதவு, கண்ணாடிகள் உள்பட வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி தமக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்...

இளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை

இளம் பெண்ணொருவரின் தற்கொலைக்கு, சட்டத்தரணி ஒருவரே காரணமென முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, குற்றப்புலனாய்வும் திணைக்களத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த விவகாரம் தொடர்பில், ஏற்கெனவே விசாரணைகளை நடத்திய யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையகக் குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை...
Loading posts...

All posts loaded

No more posts