வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறந்த கொள்கையுடன் நேர்மையானவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சியொன்றை ஆரம்பித்தால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அவ்வாறு அவர் கொள்கையுடன் கூடிய கட்சியை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருடனும், தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் பொது அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்ற தயார் என்பதை நாம் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனால் கொள்கையற்ற எவருடனும் இணைய நாம் தயாரில்லை. எமது இந்த நிலைப்பாட்டினால் நாம் தனிமைப்படுத்தப்படக் கூடும்” என்றும் குறிப்பிட்டார்.