Ad Widget

செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு: பிரதேசத்தில் பதற்றம்!

செம்மணிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மனித எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தினையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மனித எலும்புக்கூடானது இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் போனவர்களில் ஒருவரினுடையதாக இருக்கலாம் எனவும், குறித்த பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்றும் பிரதேச மக்கள் அச்சம் வெளியிடுள்ளனர்.

Related Posts