யாழ் போதனா வைத்தியசாலையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண்குழந்தைக்கு இரண்டு நாட்களின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை!!

காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் கூறப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தை இரண்டு நாள்களின் பின் நேற்று தனியார் வைத்தியசாலையில் மீளவும் சேர்க்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு தனியார் வைத்தியசாலையில்...

மானிப்பாயில் அடாவடி ஈடுபட்ட கும்பலில் மூவர் கைது

மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த...
Ad Widget

தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளனர் – மாவட்டச் செயலாளர்

தேர்தல் காலத்தில் தேர்தல் தினத்தில் அடையாள அட்டைகோரி செயலகத்தை நாடுகின்றவர்கள் இன்றும் உள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ்.முற்றவெளியில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியினைத் மொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தலமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்...

எரிபொருள் விலை திங்கள் முதல் குறைவடையும்: முக்கிய அறிவிப்பு

மண்ணெண்ணெய் விலை எதிர்வரும் தினங்களிற்குள் குறைவடையும் என கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் காரணமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 25 தொடக்கம் 30...

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசு நிதியுதவி!

வட.மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்குத் தேவையான நிதியுதவியை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கே மேற்படி நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க...

வடக்கில் கேபிள் தொலைக்காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மின்சார சபை

வடக்கு, கிழக்கில் சட்டரீதியாகக் கேபிள் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்கள், இலங்கை மின்சார சபையின் தூண்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியும் என இலங்கை மின்சார சபை முடிவு தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகள், நடை முறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டண விடயங்களைத் தீர்மானித்து, இத்தகைய இணைப்புகளை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைக் மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார...

கொழும்பு தாமரை கோபுர பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி இளைஞர் மரணம்!!

இரண்டாம் இணைப்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த மாணவன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் உயிரியல் பிாிவில் கல்வி கற்க்கும் கோனேஸ்வரன் நிதர்சன் 19 ஆவார். நண்பர்களுடன் இணைந்து மின் இணைப்பு பணிக்குச் சென்ற மாணவன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க சிறப்புக் குழு! : அங்கத்தவர்களை இணைக்க விண்ணப்பங்கோரல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் முன்னெடுத்துச் செல்ல சிறப்புக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அவர் கோரியுள்ளார். இதுதோடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை...

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று (வெள்ளிழக்கிழமை) காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. குறித்த பட்டமளிப்பு விழா வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இடம்பெறுகின்றது இந்த பட்டமளிப்பு விழாவில் கலை,மருத்துவம்,விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 1706 பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர். மேலும் இதன்போது சகல...

மீனவர் போராட்டத்தில் கூட்டமைப்பு, முன்னணியினர் இடையே வாய்த்தர்க்கம்!!

கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க, அதனை அவதானித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொந்தளித்தனர். இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் உரிமைப் போராட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வடமராட்சி கிழக்கில் கடலட்டை தொழிலில் ஈடுபடும்...

சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து இருதய சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று இரவு 7 மணியளவில் மாற்றப்பட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். “சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, பொது மருத்துவ வல்லுநர்...

3,800 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்!

3 ஆயிரத்து 800 ஆசிரியர் புதிதாக நியமிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றில் நேற்று (7) தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார். “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160.0069 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை ரூபாவின்...

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தயாராகிறார் மாவை!

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை விருப்பம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில்...

தென்னிலங்கை மீனவர்களுக்கு எதிராக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் போராட்டம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி உள்ளூர் மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துகின்றனர். யாழ்ப்பாணம் மாநகர் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அலுவலகத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால்...

விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற...

இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்.அலுவலகம் திறந்துவைப்பு

இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார். இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் க.கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின்...

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினார். “கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர...

தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? இந்த எண்ணுக்கு அறிவியுங்கள்

தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை...

கொக்குவில் இந்து ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்!!

கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியர் பிரதீபன், நேற்று மாலை தாக்கப்பட்டார். பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர், ஒழுக்கமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தனர். அதன் பின்னணியிலேயே ஆசிரியர் தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலைக்...
Loading posts...

All posts loaded

No more posts