Ad Widget

இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்.அலுவலகம் திறந்துவைப்பு

இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.

இலங்கை ஏற்றுமதிச் சபையின் யாழ்.மாவட்ட முகாமையாளர் க.கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் நிர்வாக தலைவி இந்திரா மல்வத்த, வடக்கு மாகாண முதலீட்டுச் சபையின் முகாமையாளர், இலங்கை ஏற்றுமதிச் சபையின் உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன், யாழ்.மாவட்டத்தில் இலங்கை ஏற்றுமதிச் சபை தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், வடக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களின் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பத்தினை வழங்குதல், ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வியாபார திட்டமிடல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts