பலாலி விமான நிலைய வேலைவாய்ப்புக்கள் – விண்ணப்ப முடிவுத்திகதி 26.7.2019

புதிதாக கட்டப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான  பணிநிலை வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான முடிவுத்திகதி 26.07.2019  ஆகும் விண்ணப்ப மாதிரிகள் மற்றும் விபரங்களை இங்கே காணலாம் விண்ணப்ப மாதிரிகள்  https://airport.lk/aasl/reach_us/careers.php

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில்

வடக்கு வட்ட மேசை கலந்துரையாடலின் (Northern Province Round Table) இரண்டாவது கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ...
Ad Widget

கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட களஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே இதுவாக இருக்கலாம்...

செம்மலையில் ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்!

செம்மலை பழையநீராவியடி பிள்ளையார் கோயிலில் நந்தி கொடிகளை அறுத்தெறிந்து குருகந்த ராஜமகா விகாரையின் விகாராதிபதி மீண்டும் அட்டகாசம்! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில்...

பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கவே விரும்புகின்றனர்.

“இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது. எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று...

அதிஉயர் வேகத் தொலைத்தொடர்புக் கம்பங்களை மின்விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது-பொ.ஐங்கரநேசன் காட்டம்!

செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத்...

போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

"போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும் என்பதாலேயே அரசாங்கம் கால அவகாசத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றது" எனக் குற்றஞ்சாட்டிய, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், "அதனால், போர்க் குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு...

பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாகியது

பாடசாலையிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளரினால் 23.05.2019ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தினால் பழைய மாணவர் சங்கங்களிற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வழிவகைகளை ஆராயவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடவும் வடமாகாணத்தில் உள்ள பழைய மாணவர் சங்கங்களின் பிரதானிகள் 07.07.2019 ஞாயிறு யாழ்பாணத்தில்  ஒன்றுகூடினர். பழைய மாணவர் சங்கங்களின்...

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு

தமிழ்த் தேசிய அரசியலில் சூழலியம் என்ற கோட்பாட்டையும் உள்வாங்கிப் புதியதோர் அரசியல் கட்சியாகப் பரிணாமித்துள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தனது முதலாவது தேசிய மாநாட்டை நாளை 06.07.2019(சனிக்கிழமை) அன்று நடாத்துகிறது. இம்மாநாடு அன்றைய தினம் மாலை 3.00 மணியிலிருந்து 6.00 மணிவரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ்...

யாழில் நடந்த துப்பாக்கிச் சூடு வாள்வெட்டுக்குழு உறுப்பினர் பலி

யாழ். மானிப்பாயில் ஆவாக் குழு உறுப்­பினர் எனக் கூறப்­படும் இளைஞரொருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணை­களில் பல புதிய தக­வல்கள் அம்பலமாகியுள்ளன. ஆவா குழுவிலிருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின் தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் குறித்த நபர்கள் வந்­துள்­ள­தாக...

ஆளுநரின் வழிப்படுத்தலில்,இலவச தொழிற்தகைமை செயற்திட்டம்!!

வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III அல்லது IV வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி...

“ஏழைகளுக்கு ஒரு நீதி!! செல்வந்தா்களுக்கு ஒரு நீதியா?” வீதியை மீட்க வீதியில் இறங்கிய மக்கள்!!

யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் இன்று சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்று காலை 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடைபெற்றது. யாழ்.நகரின் மத்தியில்...

அம்­பாந்­தோட்­டையை விற்று கொழும்பை விற்று வடக்­கையும் விற்கும் நிலைமை உரு­வா­கி­ விட்­டது : டக்ளஸ்

அம்­பாந்­தோட்­டையை விற்று, கொழும்பை விற்று காலியை விற்று, தெற்­கையே விற்று, இப்­போது வடக்­கையும் வெளிநாடு­க­ளுக்கு விற்கப் போகின்ற நிலைமை உரு­வா­கி­விட்­டது. நாளை சீன மக்­களோ மலே­சிய மக்­களோ குடி­யேறி விடு­கின்ற நிலை ஏற்­பட்­டால்­கூட அந்தத் தமிழ்த் தரப்­பி­ன­ருக்கு அது பிரச்­சினை இல்லை. உட­னேயே தங்­க­ளது கட்­சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலே­சிய தேசியம் என்றோ...

ஆசிரியரால் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; அதிபர் பணி இடைநீக்கம்- ஆளுநர் அதிரடி

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர்...

யாழில் நாளை கல்முனை வடக்கு போராட்டத்துக்கு ஆதவாக கவனயீர்ப்பு

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற் முன்பாக நாளை பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகா சபை அறிவித்துள்ளது....

நாவாந்துறை காணிக்குள் மாதா சொரூபம் வைக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் நாவாந்துறை – பொம்மைவெளியில் முஸ்லிம் பிரதிநிதியால் உரிமை கோரப்படும் காணியில் மாதா சொரூபம் ஒன்று நேற்றிரவு அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நாவாந்துறை – பொம்மைவெளியில் உள்ள அரச காணியை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளார் என்றும் அதனை தமக்கு பகிர்ந்து வழங்குமாறும் தமிழ் மக்கள் நேற்று வலியுறுத்தினர். அத்துடன், அந்தக் காணிக்குள்...

யாழ். நகரில் பொது வீதி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறு கோரியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரின் மத்தியில்...

வவுனியாவில் பெண்ணொருவர் கொலை!

வவுனியா, செட்டிகுளம் பகுதியின் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.இன்பராணி என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கணவன் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதுடன் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்த...

யாழ் பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புதலில் முறைகேடு! பாதிக்கப்பட்டடோருக்குகான கலந்துரையாடலுக்கு அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்த 325 வரையானோர் பாதிக்ப்பட்டுள்ளனர். இ துகுறித்து பலஇடங்களில் முறையிட்டும் எவ்விதபலனும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வினை காணவும்...
Loading posts...

All posts loaded

No more posts