Ad Widget

அம்­பாந்­தோட்­டையை விற்று கொழும்பை விற்று வடக்­கையும் விற்கும் நிலைமை உரு­வா­கி­ விட்­டது : டக்ளஸ்

அம்­பாந்­தோட்­டையை விற்று, கொழும்பை விற்று காலியை விற்று, தெற்­கையே விற்று, இப்­போது வடக்­கையும் வெளிநாடு­க­ளுக்கு விற்கப் போகின்ற நிலைமை உரு­வா­கி­விட்­டது.

நாளை சீன மக்­களோ மலே­சிய மக்­களோ குடி­யேறி விடு­கின்ற நிலை ஏற்­பட்­டால்­கூட அந்தத் தமிழ்த் தரப்­பி­ன­ருக்கு அது பிரச்­சினை இல்லை. உட­னேயே தங்­க­ளது கட்­சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலே­சிய தேசியம் என்றோ மாற்றிக் கொண்டு வாக்கு கேட்கப் புறப்­பட்டு விடு­வார்கள் என ஈழமக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லா­ளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவா­னந்தா தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­பன திருத்தச் சட்டமூல விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

டக்ளஸ் தேவா­னந்­தா மேலும் தெரிவிக்கையில்,

தெற்­கிலே காணிகள் சுவீ­க­ரிக்­கின்­ற­போது வெளி­நா­டு­களுக்கு விற்­கப்­ப­டு­கின்­ற­போது தென்­னி­லங்கை அர­சியல் கட்­சிகள் எத்­த­னையோ போராட்­டங்­களை நடத்­து­கின்­றன.வெகு­சனப் போராட்­டங்­களை ஏற்­பாடு செய்­கின்­றன.

மக்­களை விழிப்­பூட்­டு­கின்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றன. அவற்­றால் வெற்­றியும் பெறு­கின்­றன. ஆனால் வடக்­கிலே? நிலைமை தலை கீழா­கவே இருக்­கின்­றது. இன்று வடக்­கிலே இருக்­கின்ற எமது மக்கள் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து ஓரங்கட்­டப்­பட்டு நாளை சீன மக்­களோ மலே­சிய மக்­களோ குடி­யேறி விடு­கின்ற நிலை ஏற்­பட்­டால்­கூட அந்தத் தமிழ்த் தரப்­பி­ன­ருக்கு அது பிரச்­சினை இல்லை.

உட­னேயே தங்­க­ளது கட்­சியின் பெயரை சீன தேசியம் என்றோ, மலே­சிய தேசியம் என்றோ மாற்றிக் கொண்டு வாக்கு கேட்கப் புறப்­பட்டு விடு­வார்கள். அதுதான் அவர்­க­ளது நிலைப்­பா­டாக இருக்­கின்­றது

எமது மக்கள் தனி­யாகப் போரா­டு­கின்­றார்கள். அதை வைத்து இந்த அர­சியல் தரப்­பினர் அர­சாங்­கத்­துடன் பேசி எமது மக்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்க்­காமல் இருப்­ப­தற்­கா­கவே சலு­கை­களைப் பெறு­வதால் எமது மக்­க­ளது போராட்­டங்கள் இன்­னமும் வெற்றி பெறா­ம­லேயே தொடர்­கின்­றன.

அடிக்­கடி எமது மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்குள் தள்­ளப்­பட்டு வரும் நிலையில் அவர்கள் அடிக்கல் நடு­வ­தி­லேயே காட்சி கொடுக்­கி­றார்கள். எமது மக்கள் பல்­வேறு சவால்­களை வெற்றி கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்ற நிலையில், அவர்கள் சவால்­களை ஏந்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவை எல்­லாமே தேர்தல் அண்­மித்து வரு­கின்ற கால­கட்ட நாட­கங்கள் அன்றி வேறேதும் இல்லை என தெரிவித்தார்.

Related Posts