Ad Widget

யாழில் நடந்த துப்பாக்கிச் சூடு வாள்வெட்டுக்குழு உறுப்பினர் பலி

யாழ். மானிப்பாயில் ஆவாக் குழு உறுப்­பினர் எனக் கூறப்­படும் இளைஞரொருவர் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணை­களில் பல புதிய தக­வல்கள் அம்பலமாகியுள்ளன.

ஆவா குழுவிலிருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின் தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் குறித்த நபர்கள் வந்­துள்­ள­தாக இதுவரை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களிலிருந்து சந்­தே­கிப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதி­காரியொருவர் கூறினார்.

நேற்று முன்­தினம்(20) இரவு-08.40 மணி­ய­ளவில் யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்த ஆவாக் குழு­வினர் மீது பொலிஸார் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்­தனர்.

ஆவா குழு இணுவில் பகு­தியில் வீடுகள் மீது தாக்­குதல் நடத்த வரு­வ­தாக மானிப்பாய் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய முன் கூட்­டியே பிர­தே­சத்தின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோசனைக்கமைய கோப்பாய், மானிப்பாய் உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்­களின் உத்­தி­யோ­கத்­தர்­களை உள்­ள­டக்­கிய குழுவினர் இரவுநேர விசேட கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இதன்­போது பொலிஸார் பல இடங்­க­ளி­லிலும் பாதை­களில் வாக­னங்­களை சோதனை செய்­துள்­ளனர். அதன்­ப­டியே இணுவில் இணைப்பு வீதி­யிலும் பொலிஸ் குழு­வொன்று சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இதன்­போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்­கிள்கள் வேக­மாக வரு­வதை அவ­தா­னித்­துள்ள பொலிஸார் அம்­மோட்டார் சைக்­கிள்­களை நிறுத்­து­மாறு சமிக்ஞை காண்­பித்­துள்­ளனர்.

ஆனால், அதனை பொருட்­ப­டுத்­தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்­டார் சைக்­கிளில் முன் நோக்கிப் பய­ணிக்கவே பொலிஸார், தமது தற்­காப்பு அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது என்.பி. பீ.எப்.ஏ-4929 எனும் இலக்­கத்தையுடைய மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளைஞன் மீது இரண்டு துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்­டுப்­பா­டின்றி அருகிலுள்ள மதி­லுடன் மோதி விழுந்­துள்­ள­துடன் குண்­ட­டி­பட்ட இளை­ஞனும் படு­கா­ய­ம­டைந்­துள்ளான்.

இத­னை­ய­டுத்து 23 வய­தான கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த செல்­வ­ரத்­தினம் கவிகஜன் எனும் இளைஞனைப் பொலிஸார் யாழ்ப்பாணம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர். எனினும் அங்கு சிகிச்சை பல­னின்றி குறித்த இளைஞன் உயிரிழந்தான்.

இத­னி­டையே துப்­பாக்கிச் சூடு நடாத்­தப்­பட்ட இடத்திலிருந்து குறித்த மோட்டார் சைக்­கி­ளுக்கு மேல­தி­க­மாக இரண்டு வாள்கள், மேலும் இரு கூரிய ஆயு­தங்­களைப் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

மோட்டார்ச்சைக்­கிளின் இலக்­கத்­த­கடும் போலி­யா­னது என ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்ள பொலிஸார் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்­பினரொரு­வ­ரி­னு­டை­ய­தாக இருக்­கலாமெனச் சந்­தே­கிக்­கப்­படும் பணப்பையொன்றையும் மீட்டுள்ளனர்.

Related Posts