- Wednesday
- May 6th, 2026
தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க அவர்கள் உருவாக்கியுள்ளார். கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு நேற்று (2020.04.17) பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டது. கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான...
கோரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் ஏனைய...
நாட்டினை நாசமாக எம்மால் இடமளிக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தோற்றுநோய் குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர் அதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே அடுத்த வாரம்...
கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக...
கோவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்று (2020.04.17) சில நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியதுடன், பின்வரும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அந்த நிதி மற்றும் பொருள் நன்கொடைகள் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன. • இலங்கை கட்டிடக் கலைஞர்களின் நிறுவனத்தினால் 05 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. • மேல்...
அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பின்வரும் நாடுகளின் தூதுவர்களின் பங்கேற்புடன் விசேட கூட்டமொன்று (2020.04.16) அலரி மாளிகையில் இடம்பெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் இந்நாட்டிலுள்ள தூதுவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். கலந்துக்கொண்ட தூதுவர்கள் - 01. H.E Alaina Tepliz Ambassador...
அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம் என்பன ஒன்றிணைந்து கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளன. 129,011 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணங்கள் தொகுதி, அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளினால் (2020.04.16) பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன. கொரோனா வைரஸைக்...
ஏப்ரல் 20ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஐந்தாயிரம் பஸ்கள் மற்றும் 400 ரயில் சேவைகளை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக , போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தம்பித்துள்ள அரசாங்க மற்றும் தனியார் துறைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு...
குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளை நடத்துவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவினால் இது வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சையின் போது குழந்தையை தவிர மேலும் ஒருவருக்கு மாத்திரமே சத்திரசிகிச்சைக்கு வருகைதர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முடியுமானால் குழந்தையின் தாயை மாத்திரம் சத்திரசிகிச்சை கூடத்திற்குள் அனுமதிக்க முடியும் என...
கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption]...
அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு (W&OP) ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர கேட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர,...
கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது கோரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட மருத்துவமனைகளில் வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான கிளினிக்குகள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் தொடர்ந்து செயல்படும் என்று அவர்...
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன இன்று (17-04-2020) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவருடன் விமானப்படைத் தளபதியும் வருகைதந்திருந்தார். இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானம் மூலம் விஜயம் சென்ற இவர்கள் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்கள்....
கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 10 ஆம் திகதி முதல் சாரதி அனுமதிப்பத்திரம் காலவதியாகும் சாரதிகள், அதனை புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 15 ஆம்...
“கோரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கு அதிகளவான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது” இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். பாதுகாப்புத்...
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதியின்றி ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் குறித்த 50 பேரும் கைது செய்யப்பட்டதாக...
யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....
அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே குறித்த...
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இவருடன் விமானப்படை தளபதி எயா ர்மார்சல்சுமங்கல டயஸ் ஆகியோரும் வந்திருந்தனர். வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு வருகை தந்துள்ள இவர்கள் பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் போலீசார் மத்தியில் பாதுகாப்பு...
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க...
Loading posts...
All posts loaded
No more posts
