கோவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்று (2020.04.17) சில நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியதுடன், பின்வரும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
அந்த நிதி மற்றும் பொருள் நன்கொடைகள் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
• இலங்கை கட்டிடக் கலைஞர்களின் நிறுவனத்தினால் 05 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
• மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 50 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
• யூ பின் அவர்கள் மற்றும் சீன வர்த்தகர்கள் குழுவொன்றினால் 50 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.