யாழ் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடரந்து, பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட...

ராஜிவ்வை கொன்றது புலிகளே; யுத்த வலயத்திலிருந்து மக்களை வெளியேற்ற பிரபாகரன் மறுத்து விட்டார்: எரிக் சொல்ஹெய்ம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளே கொலை செய்தார்கள் என அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்ததாக, இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அவரது ருவிற்றர் பதிவொன்றில் நடந்த உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களிற்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்ததாகவும்...
Ad Widget

இந்தியாவில் தீவிரமாகி வரும் கொரோனா பரவலால் இலங்கைக்கும் ஆபத்து என எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

மணிவண்ணன் சார்பானோரை பதவி துறக்க முன்னணி அழுத்தம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமனம் பெற்ற உறுப்பினர்களில் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களை பதவி விலகுமாறு அந்தக் கட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருட காலமே பதவி வகிக்க முடியும் என்று நிபந்தனை...

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை)சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தைக்...

தமிழர்களே ஆதிக்குடிகள்: பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லையென்று ஆகாது- ஐங்கரநேசன்

இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை ஆதரிப்போம் – மாவை

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கும் நீதிப் போராட்டத்தை ஆதரிப்போம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் நீதி கோரும் நாளாகும். இலங்கையிலும் தமிழ் இன...

யாழ். பல்கலையில் பாதுகாப்பு ஊழியர்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற களவுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்று காலப்பகுதியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாங்கள்...

பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களில் ஒப்படைப்பு; இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் தலைமைத்துவப் பயிற்சி

அரச சேவைக்குள் இணைக்கப்படும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலகங்களிடம் கையளிக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கான நியமனக் கடிதங்கள் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அவையும் நேற்றைய தினம் உரிய மாவட்ட செயலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல்...

வேலைவாய்ப்பைத் தேடும் இளையோருக்கான தொழில் சந்தை முல்லைத்தீவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் உள்ள இளையோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொழில் சந்தை நாளை வியாழக்கிழமை (ஓகஸ்ட் 27) காலை 8.30 மணிக்கு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்த தொழில் சந்தையில்...

பதவிகளில் மாற்றமில்லை – உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்தப் பதவிக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமைப்போன்று முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை...

மாகாண சபை முறைமை நீக்கப்படக் கூடாது – சி.வி.கே.

தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை நீக்கப்பட கூடாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபை முறைமை என்பது ஆரம்ப காலத்தில் தமிழ்...

போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் சர்வதேசத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க எமது போராட்டத்துக்கு ஆதரவு தாருமாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஆக்கபட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 30 ஆம்...

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை மீள ஆரம்பம்

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வரும் 29, 30, 31 மற்றும் செப்ரெம்பர் முதலாம் திகதி என நான்கு நாள்களுக்கு பரீட்சாத்தமாக நடத்தப்படும் இந்தச் சேவை மக்களின் தேவையறிந்து தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கோரோனா...

நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு ஆளுநரிடம் மனுக் கையளித்தனர்

பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கும் இணைக்கும் திட்டத்தில் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்தனர். அரசினால் 50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. அதில் மார்ச் மாதம் வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன....

தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து கழுத்தை நெரித்து இளம் பெண் கொலை; பிரதான சந்தேக நபர் வாக்குமூலம்

“நித்திரை மாத்திரைகளை (Piriton) அதிகளவில் சாப்பாட்டில் கலந்து மருமகளுக்குக் கொடுத்தோம். அவள் மயக்கநிலையை அடைந்ததும் உப்பளப் பாத்திக்கு இழுத்துச் சென்று கழுத்தை நெரித்தோம். அதன் பின்னர் அவளது முகத்தை நீருக்குள் அமுக்கிக் கொலை செய்தோம்” இவ்வாறு மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணைக் கொலை செய்த அவரது மாமனார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். பிரதான சந்தேக நபரான...

புலிகள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை – அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின்...

கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது – மக்களுக்கு இராணுவத்தளபதி எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிவிட்டது என கருதி மக்கள் கொரோனா வைரஸ்...

யாழில் பொலிஸ் மீது தாக்குதல்: இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிவில் உடையில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள். இதன்போது, காசு அதிகம்...
Loading posts...

All posts loaded

No more posts