யாழில் ஒன்பதரை மணித்தியால மின்வெட்டு

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

மழை, வெள்ளம் காரணமாக யாழில் 1648 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடைமழைக் காரணமாக 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5656 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அவர்கள் நேற்றய தினம் தெரிவித்தார். (more…)
Ad Widget

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் றொபின்சன் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை அவரது இல்லத்தில் நேற்றயதினம் சந்தித்தார். (more…)

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)

பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்ல வேண்டும் என உத்தரவு!

சுதந்திர பட்டதாரிகள் மாநாட்டுக்கு சொந்த செலவில் கட்டாயம் செல்லவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 12.1.2013 சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.அம்மாநாட்டுக்கு அண்மையில் நியமனம்பெற்ற சகல பட்டதாரிகளும் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக தமது செலவில் சென்று வரவேண்டும் என பிரதேச செயலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம். (more…)

சட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்?! நீதவான்களும் ஆதரவு

சட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. (more…)

இரு கடைகளில் கொள்ளை

யாழ். ஆஸ்பத்திரி வீதி புகையிரத நிலையச் சந்தியிலுள்ள இரு கடைகள் உடைக்கப்பட்டு அக்கடைகளிலிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

யாழில் காற்றுடன் கூடிய மழை மேலும் ஒரு கிழமைக்கு தொடரும்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 54.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய அவதானிப்பாளர் ஜே.டி.நுவான் தெரிவித்தார். (more…)

வடமராட்சியில் மீன் பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை

வல்வெட்டித்துறை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை காணமல்போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல இது தேர்தல் கூட்டமைப்பு – பாரா பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 04.04.2012 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. (more…)

நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் – ஜனாதிபதி

நாட்டின் இறைமையைப் பாதுகாத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போது எந்த அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது. மக்கள் ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது மக்கள் எதிர்பார்ப்பையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி எமக்காக மக்கள் என்றில்லாமல் மக்களுக்காக நாம் என செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். (more…)

யாழ்.நகரின் சில பகுதிகளில் குடிதண்ணீர் விநியோகம் தடை!

ஆரியகுளம் சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் யாழ்.மாநகர சபையின் நீர் விநியோகக்குழாய் சேதமடைந்த மையினால் நகரின் சில பகுதிகளுக்குக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. (more…)

தம்பதியரைத் தாக்கிய இளைஞர்களுக்கு மறியல்

இரவுவேளை மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியரைத் தாக்கிய இளைஞர்கள் மல்லாகம் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (more…)

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை !

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்க தலைவர் இராஜ்குமார் நேற்று தெரிவித்தார். (more…)

பிறப்பு, இறப்பு திருமண பதிவுகளின் பிரதிகளை பெறுவதற்கான கட்டணங்கள் உயர்வு

இலங்கையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளின் பிரதிகளைப் பெறுவதற்கான கட்டணங்களும் ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலயத்தில் திருட்டு

தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலய ரிஷப வாகனம் திங்கட்கிழமை திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

நியமனம் பெறாத பட்டதாரிகள் மற்றும் HNDIT, HNDE பட்டதாரிகள் விபரங்களை கோருகிறது மாகாண கல்வி அமைச்சு

பட்டதாரி பயிலுனர் சேவையில் கடந்த வருடம் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தமது விபரங்களை வட மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர். (more…)

யாழில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ். நல்லூர் குறுக்கு வீதியில் உள்ள கிணறிலிருந்து முதியவரின் சடலம் நேற்றய தினம் யாழ். பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.மாநகர சபையின் கீதத்தை மாற்ற ஈ.பி.டிபியினர் முயற்சிக்கவில்லை: யாழ். முதல்வர்

யாழ்.மாநகர சபையின் கீதத்தில் பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கருத்துக்களும் இடம்பெற வேண்டும் என்பது ஒரு சிலரின் கருத்தே தவிர ஒட்டுமொத்த ஈ.பி.டி.பி யின் கருத்தல்ல என யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். (more…)

கடத்தப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞர் விடுதலை!

நவம்பர் மாதம் 17 ஆம் திகதி யாழ்.வட்டுக்கோட்டையில் வைத்தது வெள்ளை வானில் கடந்த கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் 19 நாட்களின் பின்னர் யாழ்.செம்மணிப் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts