‘அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க தயார்’

பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் அடிப்படை தகவல்களை வழங்கினால் ஆவணங்கள் வழங்க பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என வட மாகாண உதவி பதிவாளர் நாயகம் ஆனந்தி தெரிவித்தார். (more…)

பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம்

யாழ். பொன்னாலை உயர் பாதுகாப்பு வலயத்தினை நீக்குவது தொடர்பில் பொதுமக்களின் கடுமையான அழுத்தங்களின் அடிப்படையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் புதிய முகாம்கள் தொடர்ந்தும் அமைக்கப்பட்டு வருகின்றன. (more…)
Ad Widget

சர்வதேச திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் 'இணைந்து போதலின் சித்திரிப்புக்கள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச திரைப்படவிழா இந்த முறை இடம்பெறவுள்ளது.சர்வதேச இனத்துவக் கற்கைகளுக்கான மையம் ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 14 சர்வதேச மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. (more…)

யாழ். நாவாந்துறை வீதி புனரமைப்பு

யாழ். நாவாந்துறை பகுதி வீதிகளுக்கு தார்ரிட்டு செப்பனிடும் பணி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.புறநெகும 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள், வடிகால்கள் அபிவிருத்தி பணிகளின் கீழ் யாழ். மாநகர சபையினால் நாவாந்துறை கமால் வீதி, வைரவர் வீதி, மாவடி வீதி போன்ற வீதிகள் தார் இட்டு செப்பனிடும் பணி இடம்பெறுகின்றன. (more…)

கனடாவில் யாழைச் சேர்ந்த பெண் வாகனத்துடன் எரித்துக் கொலை

கனடா மொன்றியலில் யாழ். அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து 37 வயதுடைய யாழ். அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர். (more…)

யாழ். தொண்டர் ஆசிரியர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் சந்திப்பு

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் குறித்து அடுத்த மாதம் ஜனாதிபதியுடன் சந்தித்த கலந்துரையாடவுள்ளதாக யாழ். தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். நிரந்தர நியமனம் குறித்து கல்வி அமைச்சுடன் பல்வேறு போராட்டங்களை நடாத்தி தோல்வி கண்ட நிலையில், ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடவுள்தாக சங்கத்தினர் கூறினர். (more…)

குடிநீர் தாங்கி அமைப்பதற்கு அடிக்கல்

கொழும்புத்துறை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் பிறவுண்ஸ் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தாங்கி அடிக்கல் நடும் நிகழ்வு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா சம்பிரதாயபூர்வமாக நாட்டிவைத்தார். இந்த...

யாழில் மீண்டும் காணாமல் போதல்

யாழ், வேலணை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் லோகேஸ்வரன் (வயது 35) என்பவர் புதன்கிழமை அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார் என யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குறித்த நபரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவர்...

ஏ – 9 வீதி புனரமைப்பு பெப்ரவரிக்குள் நிறைவு

ஏ - 9 வீதி புனரமைப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் நிறைவு பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் மரியதாசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற வீதி அகலிப்பின் போது பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் அபிவிருத்தியானால் ஏற்படுகின்ற சாத, பாதகங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடலின்...

போலிச் சாமியாரை நம்பி தங்க நகைகளை இழந்த குடும்பம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் போலிச் சாமியார் ஒருவரை நம்பி குடும்பமொன்று தங்க நகைகளைப் பறிகொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் நகரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த சாமியார் ஒருவர் மக்களின் கஷ்டங்களை நீக்குவதாகக் கூறி சுய விளம்பரம் செய்து வந்துள்ளார். இவ்விளம்பரத்தைப் பார்த்து, இவரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தமது கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் தெரிவித்துள்ளனர். (more…)

ஆட்சேர்ப்பது படைத் தளபதிகளின் வேலையில்லை: சுரேஸ் எம்.பி

இலங்கை இராணுத்தில் தமிழ், இளைஞர் யுவதிகளை இணையுமாறு அழைப்பு விடுவது படைத் தளபதிகளின் வேலையில்லை. அவர்களின் பதவி நிலைகளுக்கு அப்பாற்பட்ட வேலையை அவர்கள் செய்து வருகின்றார்கள். இவ்வாறான அழைப்புக்கு தமிழ் சமுதாயம் எடுபட்டுவிடக்கூடாது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்பாணத்தில் உள்ள தமிழ், இளைஞர் யுவதிகளை படையில் இணைந்துகொள்ளுமாறு...

வாகன விபத்தில் 10 இராணுவ வீரர் காயம்

நெல்லியடி பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் இராணுவத்தின் 19ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த லக்மால் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

செக் குடியரசின் நாடாளுமன்ற தூதுக்குழு யாழ் விஜயம்

செக் குடியரசின் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். டேவிட் லொட்றஸ்கா தலைமையிலான இக்குழுவினர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து யாழ் மாவட்டத்தின் நிலமைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர். அத்துடன் ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள மரியண்ணை பேராலயத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இங்கு...

சாரதி, நடத்துநர்கள் சேவையின்போது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

சாரதி, நடத்துநர்கள் சேவையின்போது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் பழுதடைந்தால் மட்டும் கதைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவறின் சேவையில் இருந்து 10 நாள்கள் இடை நிறுத்தப்படுவர் என்று தனியார் பஸ் சங்கத்தின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி மற்றும் நடத்துநர்கள் பஸ் கடமையில் ஈடுபட்டிருக்கும் போது முகச்சவரம் செய்திருத்தல் வேண்டும். இவற்றை மீறும் சாரதி,...

காணாமல் போன மாணவன் எலும்புக்கூடாக மீட்பு

தாவளை இயற்றாலைப் பகுதியில் பற்றைக் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் கொடிகாமம் பொலிஸாரால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எலும்புக் கூட்டுடன் காணப்பட்ட உடுப்புகள் மற்றும் செருப்பு ஆகியவற்றைக்கொண்டு அது இராசன் சந்திரமோகன் (வயது 13) என்னும் மாணவனுடையது என அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அதனை வழங்குமாறு அவர்கள்...

கொடிகாமம், இராவில் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

கடந்த பல வருடமாக இராணுவத்தினர் முகாமிட்டிருந்த காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரும், மேலும் சில பகுதிகள் இன்னமும் கையளிக்கபடாத நிலையிலேயே இருந்தன. தமது சொந்த காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதனால் எந்த விதமான வீட்டுத் திட்டங்களும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் தமது காணிகளை மீட்டுத் தருமாறு அக்காணிக்கு சொந்தமான 56 குடும்பங்கள் கடந்த மாதம் இலங்கை...

இலங்கையின் செயற்கைக்கோள் விண்ணுக்கு!

இலங்கையின் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில்...

யாழில் அதிகளவானோர் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுவர்: யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி

கிளிநொச்சியை அடுத்து யாழில் இருந்தும் பெரும் தொகையானவர்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்று கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று அளவெட்டியில் நடைபெற்றது. அளவெட்டி மத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயணாளிகளுக்கான வீடுகளைக் கையளித்து உரையாற்றும் போதே அவர்...

இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

513ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் அளவெட்டி மத்திப் பிரதேசத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீட்டின் உரிமையாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். (more…)

தீவகத்தில் பணிபுரிய அரச உத்தியோகத்தர்கள் பின்னடிப்பு

அரச உத்தியோகத்தர்கள் தீவுப் பகுதியில் கடமையாற்ற தயக்கம் காட்டுவதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் விசனம் தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனம் வழங்கும் போது நியமனம் பெறும் சில உத்தியோகத்தர்கள் பின் தங்கிய பிரதேசங்களுக்கு சென்று கடமையாற்ற பின்னடிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts