- Thursday
- June 26th, 2025

தாக்குதல் சூத்திரதாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்ட வைத்தியர் மறுப்பு: காது, மூக்கு, தொண்டை வைத்திய வைத்திய நிபுணரின் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் அடையாளம் காண்பிக்க தவறுகின்றதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்;ற நிலையில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் நாவந்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு திட்டமும் கண்டிப்பாக அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ஜிஏ. சந்திரசிறி அவர்கள் வலியுறுத்தி உள்ளார். (more…)

இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற 9 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவர். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இவ்வனர்த்தம் கோப்பாய் வடக்கு இலகடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இராசதுரை திருவானந்தத்தின் மூன்றாவது மகனான கயலக்ஷன் என்ற பாடசாலைசாலை சிறுவனுக்கே...

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

யாழ். பண்ணையில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 1/2 மணித்தியால மின்தடை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. (more…)

இந்திய சிற்பக் கலைஞர் புருஷேத்மன் தலைமையிலான குழுவினரால் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அமைக்கப்ப்பட்ட சிலை நேற்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 72 அடி உயரமான இந்த ஆஞ்சநேயர் சிலை, ஆலயக் குருக்கள் சுந்தரேஸ்வரக் குருக்களினால் திறந்துவைக்கப்பட்டது.

திருமண வைபவத்திற்கு சென்று கொண்டிருந்த மூச்சக்கர வண்டியை பட்டாரக வாகனம் ஒன்று இடித்து தள்ளியதில் மிகவும் மோசமான நிலையில் மூச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

இந்திய மீனவரின் அத்துமீறலானது எமது வாழ்வாதாரம் மீது பேரிடியாக வீழ்ந்துள்ளது. இந்த அத்துமீறலானது எமது கடல் வளங்களை தினமும் சுரண்டுவது மட்டுமல்லாமல் எமது கடற்றொழிலாளரின் ஜீவனோபாயத்தையே சீரழித்துள்ளது. இந்திய ரோலர்களின் அத்துமீறல் தடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து...

கடத்தப்பட்டு காணமல் போனதாக கூறப்படும் லலித், குகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

பிரதான வீதிகளில் பாதுகாப்புக் குறியீடுகள் மற்றும் பாதசாரிக் கடவைகள் என்பன அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (more…)

யாழ்.பொலிஸ் நிலைய புதிய கட்டடத்திற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.இந்த புதிய கட்டடமானது துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டு வருகின்றது. (more…)

அச்சுவேலியில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டாவது சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்றினால் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டார். (more…)

யாழ். குருநகர் கடற்கரைப்பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 10 ஆமைகளை யாழ். பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

மொழிப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நாட்டில் எந்தப் பாகத்திலும் மொழி தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் 1956 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாட்டினைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts