Ad Widget

2012 உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மே மாதம் பல்கலை அனுமதி

university _grants_ commission_ srilankaகடந்த 2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்லைக்கழகத்திற்கு தகுதியான மாணவர்களை மே மாதம் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு மாதத்திற்கிடையில் மாணவர்களை பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு தகுதியான மாணவர்களை இந்த வாரத்திற்குள் பல்கலைக்கழகங்களிற்கு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts