Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம்!

மின்சாரக்கொடுப்பனவுகளை உரிய காலத்தில் செலுத்தாததினால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் அபாயம் காணப்படும் அதேவேளை, பணத் தொகையை செலுத்த மின்சார சபை வழங்கிய காலஅவகாசமும் நிறைவடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-யாழ்.போதனா வைத்தியசாலைக்கான மின்சார இணைப்புக்களை வழங்கும் இலங்கை மின்சார சபைக்கு யாழ்.போதனா வைத்தியசாலையினால் கடந்த 8 மாதாகாலத்திற்கும் அதிகமாக மின்சார...

வடபிராந்திய போக்குவரத்து சபையின் சேவைகள் முடங்கும் அபாயம்

ஊழியர்களுக்கான சம்பள நிலுவைகள் வழங்கப்படாமையினாலும், போதியளவு பேரூந்துகள் இன்மையானலும், இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சேவைகள் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய அலுவலகத்தினருக்கு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாத்திற்கான சம்பள நிலுவைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. (more…)
Ad Widget

ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும்...

யாழ். அரச அதிபரின் பாதுகாப்பு வாகனம் விபத்து; அதிரடிப் படையினர் நால்வர் காயம்

யாழ்.அரச அதிபரின் பாதுகாப்புக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினரின் வாகனம் சங்குவேலிப் பகுதியில் விபத்தில் சிக்கியதில் நான்கு படையினர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் யாழ்.சங்குவேலிப் பகுதியில் அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமாரின் வாகனத்திற்குப் பின்னால் சென்று கொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்...

புலித்தேவனின் சகோதரரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் யாழ்.மேல்நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சீவரெத்தினம் பாலதயாகரன் (புலிமாறன்) பயங்கரவாத தடுப்பு பிரிவு பெற்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் இன்று திங்கட்கிழமை நிராகரித்தார். புலிகளின் சமாதன செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் சகோதரரான பாலதயாகரன், கடந்த 2009 மே 17ஆம் திகதி முள்ளிவாக்காலில் வைத்து இராணுவத்தினரால் கைது...

வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோகம் தடைப்படும்

வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டன

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பெறுபேறுகளைwww.doenets.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

கைதடியில் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து படையினர் பாரிய படைமுகாம் அமைப்பு! பிரதேச மக்கள் புகார்

யாழ்.கைதடியில் அன்னம்மா ஆலயத்திற்கருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து படையினர் பாரிய படைமுகாமொன்றை பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமைத்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (more…)

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை நிறைவேறியது

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டஆதரவாக இந்தியா உட்பட்ட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஸ்யா உட்பட்ட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன..இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. (more…)

யாழ். மண்ணில் கால்பதிக்காத புலம்பெயர் தமிழர் காணி உரிமை கோருகொண்டாடுகின்றனர்: முதல்வர் கூறுகிறார்

யாழ். மண்ணில் கால்பதிக்காத புலம்பெயர் தமிழர்கள் 40 வருடங்களுக்கு பின்பு வந்து யாழ். மாநாகர சபைக்கு சொந்தமான காணியை உரிமை கொண்டாடுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குற்றம் சாட்டியுள்ளார்.யாழ். மாநாகர சபையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)

அரசுக்கு ஆதரவு பெறும் முயற்சி யாழில் தோல்வி; மகஜரில் கையெழுத்திட அரச பணியாளர் மறுப்பு

"இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்'' எனத் தலைப்பிடப்பட்டுக் குடாநாட்டு அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கையெழுத்து இடுமாறுகோரி அனுப்பப்பட்ட மகஜர் அவர்கள் கையெழுத்திடாத நிலையில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.ஜெனிவாவில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்துப் பெறும் மகஜரே அது எனத் தெரிந்துகொண்ட அரச அலுவலர்கள் பலரும் அதில் கையெழுத்து...

யுத்த காலத்தில் அழிந்து போன கலைகளை வளர்க்க அனைவரும் ஒன்றிணைவோம் ; அரச அதிபர்

யாழ். மவட்டத்தில் 38ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர் இவர்களுக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சிடம் யாழ். அரச அதிபர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளானர்.யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாசார மற்றும்...

மூன்றுபேர்கொண்ட குடும்பத்திற்கு ரூ.7500 போதுமானது: அமைச்சர் பந்துல

மூன்று பேரினைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு மாதாந்தம் ரூபாய் 7500 வருமானம் போதுமானதென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.ஹோமாகம, முல்லேகமவில் மகப்பேற்று மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றை நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பந்துல மேற்படி கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் (more…)

வீதி அகலிப்பு பணிகளையொட்டி மின்விநியோகம் தடைப்படும்

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பு பணிகளை முன்னிட்டு உயரழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. (more…)

சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிராக யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் தலைமையில் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து...

படையணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த யாழ்.மாணவர்கள் கைகலப்பு

தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள், அங்கே பயிற்சியில் காட்டிய அதீத திறமையை பார்த்து, சிங்கள மாணவர்களுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே கடந்த 12 ம் திகதி யாழ் மாணவர்கள் மீது நடத்திய முதலாவது தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது.அதன்பின்னர் கடந்த 14 ம் திகதி...

யாழ். மக்களிடையே விழிப்புணர்வற்ற தன்மையே சிறுமியர் மீதான துஸ்பிரயோகத்திற்கு காரணம்: எஸ்.சிவரூபன்

யாழ்.மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு அருகி வருகின்றமையால் சிறுமியர் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.2010ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 110 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழில் முச்சக்கர வண்டி சாரதியாக பெண்கள்

யாழில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்களுக்கு மகளீர் தினமான நேற்று, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில், பெண்கள் யாழ் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி நவரத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில், 10 பெண்களுக்கு மானிய அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

யாழில் படைவீரர்கள் மூவர் சுட்டுக்கொலை?

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ காவலரணிலே பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த படைவீரர்கள் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளதாக இணையத்தள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான வழக்கொன்றுக்காக தொடர்ந்து ஐந்து தடவை நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிமால் ரத்நாயக்காவுக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts