Ad Widget

நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், தீவகத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் நிர்வாக அலுவலர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதைத் தொடர்ந்து அப்பதவிகளுக்கு உரியவர்களை நியமனம் செய்ய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தரம் ஒன்றைச் சேர்ந்த அலுவலர்களை பதில் நிர்வாக அலுவலர்களாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கை...

அபிவிருத்திக் குழு கூட்டம் அரசியல் கட்சிக ளின் சண்டைக்களமானது

யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட் டம் நேற்று அரசியல் கட்சிக ளின் சண்டைக்களமானது.யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டம் நீண்ட காலங்களின் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம் பெற்றது.அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இணைத் தலைமையில் இந் தக் கூட்டம் இடம்...
Ad Widget

சிவில் நிர்வாகத்தில் காணப்படும் தலையீடுகள் நீக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சிவில் நிர்வாகத்தில் காணப்படும் படைத்தரப்பின் தலையீடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் விசேட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,...

பிரதேசசபைத் தலைவர் மீது கடற்படையினர் தாக்குதல்

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 8.45 மணியளவில் கீரிமலை சேந்தான் குளம் பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி. வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சேந்தான்குளம் பகுதியிலுள் பற்றைகளை அழிப்பதற்கு...

யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி

யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியி ட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான துறைகளில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முதலீடு செய்து அதன்மூலம் யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியிருப்பதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் பெறப்படும் இலாபம் புலிகளின் நிதிக்...

ஜனாதிபதியின் பணிப்புரையை நடைமுறைப்படுத்தியது தவறா? வலி.தெற்குப் பிரதேச சபைத் தலைவர் கண்டனம்

ஜனாதிபதியின் பணிப்புரையை மேற்கொள்ள முயன்ற வலி.வடக்கு சேந்தான்குளம் பகுதி மக்களும் வலி வடக்குப் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினரும் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கவலைக்குரியதும், கண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.இவ்வாறு வலி.தெற்குப் பிரதேச சபையின் தலைவர் பிரகாஷ் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார். (more…)

பொருட்களின் விலைகளை அவதானித்து கொள்வனவு செய்யுமாறு அறிவுரை

நிர்ணய விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்வதை அவதானித்து பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோருக்கு யாழ்.பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது.யாழில் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. (more…)

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் தடை

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.16ஆம் திகதி திங்கட்கிழமை, 18 - புதன் கிழமை, 20 - வெள்ளிக்கிழமை மற்றும் 22 - ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் (more…)

காவற்றுறையினரின் செயற்பாடுகள் குறித்து வாகன உரிமையாளர்கள் விசனம்

யாழ். மாவட்டத்தில் காவற்றுறையினரால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட செயற்பாடுகளினால் வாகன உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் காவற்றுறையினர் வாகனங்களை மறித்து வாகன வரிப் பத்திரத்தை சோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்போது, காவற்றுறையினரால் வாகன உரிமையாளர்கள் தேவையற்ற பல நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆதன விவரம் திரட்டுகிறது வேலணைப் பிரதேச சபை

முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் வேலணை பிரதேசசபை வட்டார ரீதியாக ஆதனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டி வருகின்றது.வேலணை 4, 5, 6ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் தமது ஆதனங்களின் விவரங்களான உறுதி, காணி வரைபடம், குடும்ப அட்டை மற்றும் இவற்றின் பிரதிகளை வேலணை பிரதேசசபைத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து தமது ஆதனங்களை உறுதிசெய்து வருகின்றனர். (more…)

அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

நேற்று யாழ் பல்கலைக்கழகத்திற்க்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களது குறைகள் பற்றி கேட்டறிந்ததோடு பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடமும் எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் பற்றியும் ஆலோசனை செய்தார். மேலும் யாழ் பல்கலைக்கழகத்தினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்....

ஒட்டகப்புலம் காணி தனியாருடையது; – யாழ். அரச அதிபர்

ஒட்டகப்புலம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதைத் தெளிவுபடுத்திப் பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: (more…)

இரண்டு இணையத்தளங்களுக்கு எதிராக அரசாங்க அதிபர் நீதிமன்றில் வழக்கு

இரண்டு இணையத்தளங்களுக்கு எதிராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் சார்பில் யாழ்.பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.நேற்று(09.01.2012) திங்கட்கிழமை இந்த வழக்கு யாழ்.நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, அரச அதிபர்மீது குறித்த இணையத்தளங்கள் எவ்வகையான அவதூறுகளை மேற்கொண்டுள்ளன என்பன தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். (more…)

யாழில் வேகமாகப் பரவும் ‘தைபஸ்’ உண்ணிக் காய்ச்சல்

யாழ். குடாநாட்டில் 'தைபஸ்' என்னும் உண்ணிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.கடந்த டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் 57 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 101 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கிடைத்திருப்பதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

யாழில் முச்சக்கரவண்டிகளை பதிவுசெய்ய ஏற்பாடு

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கரவண்டிகளும் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டுமென யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களின் மத்தியில் முச்சக்கரவண்டிகள் சில இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

யாழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரில் 28,000 பேர் மீண்டும் இணைப்பு

யாழ். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தோரில் 28,000 பேரை மீண்டும் அப்பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தேர்தல் அதிகாரிகள் தீர்மானித்தள்ளனர்.யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41,000 பேரை நீக்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மக்களின் முறைப்பாட்டையடுத்து 28,000 பேரை மீண்டும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்தார்.

ஊடகங்கள் மக்களுக்கு உணர்ச்சியினைத் தூண்டி படுகுழிக்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றன: அமைச்சர் டக்ளஸ்

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், தமிழ் மக்களை மீண்டும் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை தோற்றுவித்து வாழ்வை வெறுமையாகவும், வேதனையோடும் சிந்திக்கின்ற ஒரு நிலைமையை ஊடகங்கள் ஏற்படுத்த முனைவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (more…)

புலம்பெயர் தமிழர்களை மீண்டும் தாய் நாட்டுக்கு அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்: யாழ்.ஆயர்

'புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்' என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் தலைமையிலான குழுவினர் யாழ். ஆயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். (more…)

பிரதேச செயலர்களின் 6 பேரின் இடமாற்றம் இன்று முதல்

யாழ். மாவட்டத்தின் 6 பிரதேச செயலர்களது இடமாற்றத்தை உடனடியாக இன்று முதல் அமுல்படுத்த வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நேற்று மாலை அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் யாழ். மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தது. இதன் பின்னர்...

இலவச உதவிகள் எவற்றையும் பாடசாலைகள் பெறத் தடை!; ஆளுநர் கடும் உத்தரவு

பாடசாலைகளிலுள்ள பதிவு செய்யப்படாத அபிவிருத்திச் சங்கங்கள் யாவும் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பாடசாலைகளுக்கு கிடைக்கும் இலவச உதவிகள், அன்பளிப்புகள் எதுவாக இருந்தாலும் அதிகாரிகளின் அனுமதியின்றி அதிபர்கள் எவரும் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts