அடகு மீட்கும் தவணையினை அதிகரித்தது மக்கள் வங்கி

பொது மக்களின் நன்மை கருதி மக்கள் வங்கியில் அடகு வைக்கும் நகைகளை மீளப் பெறும் வகையில் பகுதி பகுதியாக பணம் செலுத்தும் தவணையை மக்கள் வங்கி மேலும் அதிகாரித்துள்ளது. (more…)

வடக்கு ஆளுநருடன் இந்திய எம்.பிக்கள் சந்தித்துப்பேச்சு

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியைச் சந்தித்து வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். (more…)
Ad Widget

வடக்கில் தேர்தல் நடக்கும்: அமைச்சர் டக்ளஸ்

வடக்கு மாகாண சபை தேர்தலை குழப்புவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் இந்நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி வடமாகாண சபை தேர்தல் நடக்குமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

இந்தியக் குழுவினரின் அரியாலை விஜயம்

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினனர்,நேற்று புதன்கிழமை மாலை யாழ் அரியாலைப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் (more…)

இரண்டு மோட்டார்சையிக்கிளை மோதிய ஹைஏஸ் வாகனம் தப்பிச் சென்றது

உடுவில் ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிகக்கப்பட்டுள்ளார். (more…)

இந்திய பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் யாழ்.விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். (more…)

யாழில் அரச வங்கிகளில் மீளளிக்கப்படாத கடன் தொகை, 400 கோடியை தாண்டியது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அரச வங்கிகளில் கடனாக பெறப்பட்ட 400 கோடி ரூபா வரையில் இதுவரை மீளளிக்கப்படாது உள்ளதாக அரச வங்கி அதிகாரி ஓருவர் தெரிவித்துள்ளார். (more…)

10 இலட்சம் ரூபா பெறுமதியில் திருத்தப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் செயழிலந்தது!

யாழ். மாநகர சபையால் அண்மையில் புனரமைக்கப்பட்ட யாழ் மணிக்கூட்டுக் கோபுரம் 19 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் செயலிழந்துள்ளது. (more…)

வீதிகளில் குவியும் மாமிசக் கழிவுகளால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியில் ஆடியபாதம் வீதியில் மாமிசக் கழிவுகள் குவிக்கப்படுகின்ற காரணத்தினால் போக்குவரத்திலும், சுகாதாரத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பிரதேச குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

குடாநாட்டிலும் படையினரால் வாக்காளர் விவரம் திரட்டு

கிராம சேவையாளர்களிடமிருந்து வாக்காளர் பெயர்ப் பட்டியலைக் கோரும் நடவடிக்கைகளை யாழ். மாவட்டத்திலும் படையினர் ஆரம்பித்துள்ளனர். (more…)

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாதென கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

தேர்தலுக்கு முன்னர் படைகளை அகற்றுங்கள் – கபே

வடக்கில் நீதியான முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டுமெனில், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்து இராணுவத்தினரை உடன் அகற்றுமாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ("கபே') அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

போலி கடனட்டைகளுடன் கைதான வடபகுதி சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

15 போலி கடனட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் வடபகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. (more…)

ஊஞ்சல் கயிறு இறுகி உரும்பிராய் சிறுமி பலி

ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த போது அதன் கயிறு இறுகி சிறுமியொருவர் பலியான சம்பவமொன்று உரும்பிராய் மேற்கு அன்னங்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

வட, கிழக்கில் வாக்காளர்களை பதிவதில் அக்கறையின்மை: எஸ்.ரங்கராஜன்

வடக்கு கிழக்கில் வாக்காளர் பதிவுகளை உரிய முறையில் பதிவு செய்வதில் அக்கறையின்மை காணப்படுவதாக வட மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் எஸ்.ரங்கராஜன் தெரிவித்தார். (more…)

அதிபரை இடமாற்றும் முயற்சிக்கு பெற்றோர் எதிர்ப்பு

ஆவரங்கால் நடராசா இராமசாமி மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுவதற்து எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்தக் கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

பட்டதாரிகளையும் இளைஞர்களையும் பகடைக்காய்களாக்கி யாழில் அரசியல்; அங்கஜன் இராமநாதன்

இளைஞர்களையும், வேலையற்ற பட்டதாரிகளையும் பகடைக்காய்களாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுவிட்டு அவர்களை நடுத்தெருவில் விடும் அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். (more…)

தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை

யாழ். குடாநாட்டிற்கு தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்கள் பலவும் காலம் கடந்தவையாகவும் உற்பத்தித் திகதி அவற்றின் முடிவடையும் திகதி என்பன குறிக்கப்படாமல் வர்த்கர்களால் எடுத்துவந்து வியாபாரம் செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக (more…)

வடமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆட்சேர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

இணைந்த மாகாண சபை வேண்டும்: கூட்டமைப்பு

பொலிஸ்,காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக கையளிக்கப்பட்டதும் வடக்கு,கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபையாக அமைக்கப்படல்வேண்டுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts