- Monday
- May 4th, 2026
மதுவரித் திணைக்களத்தின் வட மாகாண அலுவலகங்களில் கடமையாற்றுவதற்காக 29 புதிய உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்ப்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அரியாலை, புங்கன்குளம் சனசமூக நிலைய மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை (06) வழங்கப்பட்டன. (more…)
பல்கலைக்கழக பேராசிரியர்கள், தங்களது பதவிகளை இனம்சார், மக்கள் நலன்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிப்பார் (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியில் குறிப்பாக மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் வாகனங்களை விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (more…)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட சாவகச்சேரி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட 8 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் (more…)
"ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து எமது மக்களை இன்னமும் மாயைக்குள் வைத்திருக்கவே சிலர் விரும்புகின்றனர்" (more…)
ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு, சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார். (more…)
பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், (more…)
இலங்கையிலுள்ள சகல மக்களையும் அவர்களது குடும்பவாரியான விபரங்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் நேற்று புதன்கிழமை(05) தெரிவித்தது. (more…)
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் ஆனால் எப்போது வழங்கப்படும் என்று கூறமுடியாது (more…)
இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் (more…)
வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி நேற்று புதன்கிழமை (05.11.2014) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. (more…)
மூதாதையர் விட்டுச் சென்ற கலைகளை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி, மருதங்கேணி பகுதிகளிலுள்ள வெதுப்பகங்களில் 370 தொடக்கம் 400 கிராம் நிறையுடைய பாண்கள் உற்பத்தி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் புதன்கிழமை (05) தெரிவித்தார். (more…)
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கும் சில சலுகைகளை வழங்குவதற்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
இலங்கையின் பிரதான விமான சேவை நிலையமாக காணப்படும் கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்துள்ளார். (more…)
பாப்பாண்டவர் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய ரீதியான தேர்தல்களை நடத்தக் கூடாது என கத்தோலிக்கச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
மலையக மக்களுக்காக கவலைப்படும் கூட்டமைப்பு தமது சமூகத்திலும் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்
மலையக மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலைப்படுவது உண்மையாக இருப்பின் அது வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று கூட்டமைப்பு தனது சமூகத்தின் பேரிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
