Online கடவுச்சீட்டுக் குறித்து வௌியான அதிரடித் தகவல்!!

கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 30 நாட்களில் 29,578 பேர் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் எனவும் அவர்களில் 5,294 பேர் ஒரு நாள் சேவைக்கும், 24,285 பேர் பொது...

யாழில் விமர்சையாக திறந்துவைக்கப்பட்ட சங்கிலியன் தோரண வாயில்!!

யாழ்ப்பாணத்தில் நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுநேற்றையதினம் (16.07.2023) இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது. மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய...
Ad Widget

சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு!! ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா!!

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கலந்து கொள்ளவுள்ளார்....

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைசார் தரப்பினருடனான விசேட கலந்துரையாடல் நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது. இதில்,...

யாழில் மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

யாழில் இலவச வகுப்புக்களை நடத்தி வந்த, நபரொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்றைய தினம் (புதன்கிழமை) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியுள்ளனர். இதன்போது 13...

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்!!

பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார்...

வடக்கின் இ.போ.ச. சாலைகளுக்கு புதிய பேரூந்துகள் கையளிப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன . நேற்று யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன . இதன்போது, 04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேரூந்துகள் மன்னாருக்கும் ,3 பேரூந்துகள்...

மனித புதைகுழி தமிழர்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: கஜேந்திரன்

1984 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிகின்ற வரைக்கும் இலங்கை இராணுவத்தினருடைய முழுமையான ஆக்கிரமிப்பு பிரதேசமாக இருந்த கொக்குத்தொடுவாய் பகுதியிலே பாரிய மனிதப் புதைகுழி கண்டெடுக்கப்பட்டதென்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே பாரிய அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்ற பெண் மரணம்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு மசென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே. தேவரஞ்சன் (வயது 31) எனும் இளைஞன் நேற்றுமுன் தினம் இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை...

சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர்: தமிழர் விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான உரையாடல் இடம்பெற்றது என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில்...

அடுத்த வருட பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை காலங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

கணவன் உயிரிழந்த நிலையில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்றைய தினம் (புதன் கிழமை) அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பளை இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராணி என்ற 60 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது பிள்ளைகள் செட்டிக்குளம்...

பால்மா விலையில் மாற்றமா? பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம்!

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியின் பின்னர் செலவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும்...

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு பிரதமர் மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்!!

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன....

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் பணியிடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக இராணுவம், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு : புள்ளிகளின் அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முன்னிலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை...

மனிதப் புதைகுழி தொடர்பாக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என...

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்!

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில்...

ஒரு வருடம் கழித்துப் பழி தீர்ப்பு; மூவர் மீது வாள் வெட்டு

ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினையொன்றுக்குப் பழிதீர்க்கும் விதமாக மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப் பகுதியில் எரிபொருள் நிரப்புவது தொடர்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலை...

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!!

2033 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக பரீட்சையை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட்...
Loading posts...

All posts loaded

No more posts