முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன?

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் இழுத்தடிப்புகள் இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் அரசு தடையேதும் விதித்துள்ளதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்....

வற்வரி அதிகரிப்பு? சகல பொருட்களின் விலைகளும் உயரும்!!

வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­ட­தன்­மூலம் சகல பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­படும். இதனால் சாதா­ரண பொது மக்­களே பாதிக்­கப்­போ­கின்­றனர் என தேசிய தொழிற்­சங்க முன்­ன­ணியின் தலைவர் சமன் ரத்­ன­பி­ரிய தெரி­வித்தார். வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­வதன் மூலம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டப்­போகும் பாதிப்பு குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் இது குறித்து தொடர்ந்து கூறு­கையில், அர­சாங்கம் அண்­மையில் வரி...
Ad Widget

யோசித்தவுக்கு பிணை

சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும் : இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் மின்தடைகளின் எதிரொலி- மின்சாரசபைத் தலைவர் பதவி விலகுகிறார்!

இலரங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்ததால், நாட்டின் சகல பகுதிகளும் இருளில் மூழ்கின. இதனையடுத்து இலங்கை மின்சாரசபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். ஆறு மாதகாலத்தினுள் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு ஏற்பட்டமைக்கு பொறுப்பேற்று தனது பதவியை...

பாண் விலையும் 4 ரூபாவால் அதிகரிக்கும்?

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பாணின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 7 ரூபாய் 20 சதத்தால் நேற்று அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக 1 இறாத்தல் பாணின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் மார்ச் 14ஆம் திகதி முதல் 20 ஆம்...

பிரபாகரன் யுத்தம் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா ? போர் விதிகளை மீறி கொல்லப்பட்டாரா?

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? அவர் உயிருடன் பிடிபட்டாரா என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான...

மோட்டார் சைக்கிள் குழு அட்டகாசம்! வாள்வெட்டில் சிறுவன் படுகாயம்!!

யாழ். நகருக்கு அண்மையாக தட்டார் தெரு சந்திக்கு அண்மையில் பாடசாலை சிறுவனை 12 பேர் கொண்ட குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று மதியமளவில் 8 மோட்டார் சைக்கிள்களில் வந்தோரே. மரக்காலையில் நண்பர்களுடன் நின்ற சிறுவனை வெட்டிக் காயப்படுத்தியது. இதில் க.ஹேமராஜன் (வயது 17) என்பவரே காயமடைந்தவராவார். குறித்த சிறுவன் மீது...

திடீர் மின் தடைக்கான காரணம் வௌியானது!

நேற்று பிற்பகல் அளவில் நாடுபூராகவும் தடைப்பட்ட மின் வழங்கள் நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை, பியகம பகுதியிலுள்ள பிரதான ட்ரான்ஸ்போமரில் ஏற்பட்ட சேதமமே இவ்வாறு திடீர் மின் தடை ஏற்படக் காரணம் என தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை தாமதமின்றி கைவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை

எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு...

சிங்கள மாணவர்களின் தாக்குதலின் எதிரொலி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். சிங்கள மாணவர்களால், சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 9 தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தகுந்த நீதி கிடைக்கும் வரை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வளாக முதல்வருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். சித்த மருத்துவ...

அளித்த வாக்குறுதியை 3 மாதங்களில் நிறைவேற்றுவேன்! தென்னிலங்கை கூச்சல்களுக்கு அஞ்சவில்லை!! யாழில் ஜனாதிபதி

வலி. வடக்கு மக்கள் தமக்கு சொந்தமான நிலத்தையே கேட்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம். 6 மாதங்களுக்குள் சொந்த நிலங்களில் குடியமர்த்துவேன் என நான் உறுதியளித்தேன். 3 மாதங்களில் ஒரு தொகுதி நிலத்தை விடுவித்துள்ளேன். மீதமிருக்கும் 3 மாதங்களில் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். இவ்வாறு உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று சனிக்கிழமை...

காணி விடுவிப்பு நிகழ்வில் கடும் பாதுகாப்பு கெடுபிடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பங்கேற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் இராணுவத்தினர் நேரடியாகவும் இரகசியமாகவும் பல பாதுகாப்புக் கெடுபிடிகளை விடுத்தனர். இதனால் இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியிருந்தனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 750 ஏக்கர் காணிகளை விடுவித்து மீண்டும் மக்களிடம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இடம்பெற்றது....

முதல்வர் விக்கியும் அமைச்சர் சுவாமிநாதனும் காரசார விவாதம்! அதிகாரத் தொனியில் அடக்கினார் ஜனாதிபதி!!

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் நேற்று சனிக்கிழமை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு நிகழ்வின் மேடையில் இடம்பெற்றது. காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியை மக்களிடம்...

உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலவீனப்படுத்தும் எந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இளம் தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் 17வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் சரியான...

யாழ்.பொதுநூலகத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உருவச் சிலை

யாழ்.பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார். யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும்...

சிறுமி சேயா படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவன் மீண்டும் கைது

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் நேற்று மினுவாங்கொடை நீதவான்...

நீண்டநேரம் அலைபேசியில் உரையாடிய இளைஞன் மரணம்

நீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (12) நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகர்-மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மலிக் பௌமி (வயது 18) என்ற இளைஞன், கட்டிலில் படுத்துக் கொண்டு...

வல்வட்டித்துறையில் இரண்டு கிலோவிற்கும் அதிகமான ஹெரோய்ன் கண்டுபிடிப்பு

வல்வட்டித்துறை பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வல்வட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமானாறு அக்கறை கடற்கரை பகுதியில் வைத்து இன்று காலை 8.30 மணியளவில் இவை மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் இதுவரை...

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது. வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூத்திசெய்யும் வகையில், 111 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ரீதியில்...
Loading posts...

All posts loaded

No more posts