உடுவில் கொள்ளை; பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த சந்தேக நபரை விடுவித்த சுன்னாகம் பொலிஸார்

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மூலிகை மருந்து முல்லைத்தீவில் தயாரிப்பு- அங்கீகாரம்பெற நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக மூலிகை மருந்து வில்லையை முல்லைத்தீவின் பிரபல தொழில் முயற்சியாளர் உற்பத்தி செய்துள்ளார். தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் கடந்த வியாழக்கிழமை அது தொடர்பான விளக்கத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் விபரித்தார். கூட்டுக் குளிசை(கப்சூல்) வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த உற்பத்தியானது 100 வீதம் மூலிகைத் தயாரிப்பாகும். இந்நிலையில், முயற்சியாளரின்...
Ad Widget

மக்களே எம்மைச்சுற்றி அச்சுறுத்தல் உள்ளது ! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ! கொரோனா பரவாது என்ற சான்றிதழை வழங்க முடியாது – தொற்றுநோய் தடுப்பு பிரிவு

அடுத்த வாரம் தொடக்கம் ஊரடங்கு தளர்க்கப்படுவதால் நிலைமைகள் வழமைக்கு திரும்பிவிட்டதாக மக்கள் நினைத்துவிட வேண்டாம். கொவிட் 19 கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகிறோமே தவிர நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழை ஒருபோதும் வழங்க முடியாது என்கிறார் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர. எம்மை சுற்றி வைரஸ் அச்சுறுத்தல்...

பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்- யாழ்.பல்கலை மருத்துவ பீடாதிபதி

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து தடையின்றி முன்னெடுப்பதற்கு ஊடகங்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “எல்லாருக்கும் தெரியும் கடந்த மாதம் 2ஆம் திகதியில் இருந்து யாழ். மருத்துவ...

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்தது!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான நிலைவரப்படி 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்றாளர்களின் எண்ணிக்கை 800ஐக் கடந்துள்ளது. இதேவேளை, இதுவரை 232 பேர் குணமடைந்துள்ள நிலையில்...

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா – மருத்துவர் சத்தியமூர்த்தி

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (06-05-2020) தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையின் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்....

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ஆய்வுகூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன எனவும் அவர்...

கொரோனா குறித்து தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொவிட் -19 தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நீங்கவில்லை எனத் தெரிவித்துள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியா உள்ளோம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் தொடர்ந்தும் மக்கள் தமது சுய பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமூக பரவல் குறித்த அச்சம் குறைந்துள்ளது. எவ்வாறு இருப்பினும் பரிசோதனைகளை...

8ஆவது கோரோனா நோயாளி உயிரிழப்பு!!

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபரும் இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல், பொல்பித்திகமவைச் சேர்ந்த 72 வயதான பெண், ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

14 வயதுச் சிறுமி வன்புணர்வு; உறவுமுறை இளைஞர்கள் இருவர் கைது!!

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “14 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்தது. அதுதொடர்பில் சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின்...

அடையாள அட்டை இறுதி இலக்கப் பொறிமுறை ஊரடங்கு உள்ள இடங்களில் மட்டும் நடைமுறை – தளர்த்தப்படும் இடங்களுக்குப் பொருந்தாது

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை” இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மக்களின் தேவையற்ற ஒன்றுகூடலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் போது மட்டுமே...

மிருசுவிலில் உறவினர்களுக்கு இடையே மோதல்!! ஒருவர் சாவு! இருவர் படுகாயம்!!

மிருசுவில் கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்....

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடி; ஆவா குழுவை வைத்து செய்விப்பேன் எனவும் மிரட்டல்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்பவம்...

இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளருக்கு மீளவும் தொற்று – இதுவரை 700 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்ததாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீள அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட சம்பவம் ஜா - எல பகுதியில் பதிவாகியுள்ளது. 67 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொரோனாவால் மீளவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜா எல நகர சபையின் பிரதான...

வடமராட்சி கிழக்கில் மக்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்!!

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்குச் செல்ல பயந்த நிலையில் தமது வீடுகளில் தங்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்று. நேற்று வியாழக்கிழமை...

மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை – அஜித் ரோஹன

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்து மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஊரடங்கு தளர்த்தப்பம் பிரதேசங்கள், மற்றும் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படல் வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்ளுதலோ, அத்தியாவசியத் தேவையின்றி...

சற்றுமுன் வெளியான செய்தி: நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு!!

நாளை (27) திங்கட்கிழமை முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையைில், இந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00...

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு...

இதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு!!

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 477 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கியமையால் செந்தூரன் உயிரிழந்துள்ளார்!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல்...
Loading posts...

All posts loaded

No more posts