ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து விடுதலை செய்து ( Acquitted and Released) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டில்...

வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 146 ஆக பதிவு

வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு...
Ad Widget

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கு புதிய வகை கொரோனா அடையாளம்

பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்தானியா மற்றும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காணப்படுவதாக தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து...

அடுத்த மாதம் இலங்கைக்கு கிடைக்கின்றன ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா, பைசர் தடுப்பூசிகள்!!

அடுத்த மாதம் ஒக்ஸ்போர்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இந்தியா மூலமாகவும், பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து இந்தியாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் அவர்...

வடக்கில் இன்று 31 பேருக்கு கோரோனா தொற்று!!

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்று 31 பேருக்கு கோரோனா வைரஸ் தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர்...

போராட்டம் நிறைவுக்கு வந்தது: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அங்கீகரிக்கப்பட்ட தூபியாக அமைக்கத் தயாராக உள்ளேன்; பேரவைக் கூட்டத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன்; துணைவேந்தர்

“மாணவர்களின் உணர்வுடன் இசைந்தே துணைவேந்தரும் பயணிக்கின்றார். அவ்வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியாக கட்டியெழுப்ப தயாராக உள்ளேன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது தொடர்பான மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார் என்று நாடாளுமன்ற...

தூபியை மீள அமைக்க அனுமதிவேண்டும், பொலிஸார் வெளியேறவேண்டும்; யாழ்.பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு பொலிஸார்...

களத்தை விட்டகலாமல் இரவிரவாக போராட்டம்: காலையில் மீண்டும் பதற்றமான நிலைமை!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவிரவாக நீடித்து, இன்று காலையும் நீடிக்கிறது. விடிகாலையில் சற்று அமைதியான நிலைமை காணப்பட்டாலும், மீண்டும் தற்போது களம் சூடு பிடிக்கிறது. பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தற்போது அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பொதுமக்கள் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர். நேற்று...

மூதூர் சென்ற அல்வாயைச் சேர்ந்தவருக்கு கோரோனா; பல குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!

அல்வாய் பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவருக்கு மூதூரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் டிசெம்பர் 19ஆம் திகதியிலிருந்து ஜனவரி 6ஆம் திகதிவரை பருத்தித்துறை அல்வாயிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணி நிமிர்த்தம் மூதூர் பயணித்த போதே அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளராக...

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டவிரோதமானது: பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது....

வவுனியா நகரில் புதிய கொத்தணி!! 54 பேருக்கு கோரோனா தொற்று!!

வவுனியா நகரில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 54 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரில் பசார் வீதி உள்பட இரண்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று 114 பேரிடம் மாதிரிகள்...

வடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- பூநகரிக்கு தப்பி வந்தவர்களும் உள்ளடக்கம்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் மேலும்...

யாழ். பல்கலை மாணவனுக்கு கொரோனா தொற்று: உணவகத்துக்குப் பூட்டு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று...

இந்திய கோவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க தயார்- இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை ஏனைய நாடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் போது இலங்கைக்கு முக்கியதுவமளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த...

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா- நான்கு மாவட்டங்களில் தொற்றாளர்கள்!

வடக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 469 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா பட்டாணி சூர் பகுதியில்...

3 நாளுக்கு முன் மருதனார்மடம் வந்த பருத்தித்துறை வாசிக்குக் கோரோனா தொற்று!!

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாக அவர் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்தார்....

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் ஐவருக்குத் தொற்று

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று (ஜன. 4) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர்...

தடுப்பூசி கிடைக்க எவ்வளவு காலம் எடுக்குமென உறுதியாகக் கூற முடியாது; அதுவரை யாருக்கும் எங்கும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

“கோவிட் – 19 தொற்று நோயால் இருண்ட பயணத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒளிக்கீற்றுக்களாக தெரிகின்றன. இந்தப் பேரவலத்திலிருந்து இவை மக்களை மீட்டெடுக்கும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. ஒரு நாட்டில் கோரோனா தொற்று பரம்பலை முற்றாக நிறுத்த வேண்டுமாயின் அந்த நாட்டு சனத்தொகையின் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்தால்தான்...

இந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை

நாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே குறித்த தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு,...
Loading posts...

All posts loaded

No more posts