Ad Widget

யாழ்.பல்கலை. மாணவிக்கு கோரோனா தொற்று; கிளிநொச்சியில் மூவர், சங்கானையில் ஒருவரும் பாதிப்பு

கிளிநொச்சி 3 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும் மாத்தளையைச் சேர்ந்த மாணவி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 276 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

அவர்களில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டது. அவர்கள் மூவரும் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்படிருந்தவர்கள்.

மேலும் சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உள்பட்ட பொன்னாலையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை பரிசோதனையில் உறுதிப்படுத்தபட்டது. அவரும் கொழும்பிலிருந்து வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தபட்டிருந்தவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவருக்கு தொற்று உள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மாத்தளையிலிருந்து கற்கைகளுக்கு திரும்பிய நிலையில் விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

Related Posts